ஆப்நகரம்

டுவிட்டரில் கலாய்த்ததால் பொறுமை இழந்த குஷ்பூ!

டுவிட்டரில் கலாய்த்ததால் பொறுமை இழந்த குஷ்பூ!

TNN 19 Dec 2016, 8:57 am
தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் டாக் ஷோ நிகழ்ச்சிகளுக்கு இது கெட்ட காலம் என்றே சொல்ல வேண்டும். ஜி தமிழில் ஒளிப்பரப்பாகும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியின் தொகுப்பாளர் லட்சுமி ராமகிருஷ்ணனை சமூக வலைதளங்களிலும், சினிமா மற்றும் தொலைக்காட்சிகளிலும் தொடர்ந்து கிண்டல் செய்து வருகின்றனர். அதனால் அவர் சமூக வலைதளத்தை விட்டே வெளியேறி விட்டார்.
Samayam Tamil khushbu loses cool after being abused on twitter
டுவிட்டரில் கலாய்த்ததால் பொறுமை இழந்த குஷ்பூ!


தற்போது அந்த வரிசையில் நடிகை குஷ்பூ இணைந்திருக்கிறார். சன் டிவியில் நடிகை குஷ்பூ தொகுத்து வழங்கும் நிஜங்கள் நிகழ்ச்சியின் புரோமோவை கிண்டலடித்து சிலர் டுவிட்டரில் கருத்து பதிவிட்டிருந்ததால் குஷ்பூ பொறுமை இழந்துள்ளார். எல்லை தாண்டி அநாகரிகமான முறையில் கருத்து தெரிவித்ததால் குஷ்பூ அதற்கு பதில் அளிக்கும் வகையில் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

குஷ்பூவின் டுவிட்டர் பதிவுக்கு பாடகி சின்மயி ஆதரவு தெரிவித்துள்ளார். கடுமையான வார்த்தைகளால், ஆத்திரத்துடன் கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை. மிகவும் யதார்த்தமாக, “சிலருக்கு அழுத்தமாக சொல்ல வேண்டி இருக்கிறது, அவர்கள் ஒரு பெண்ணில் இருந்து தான் பிறந்தவர்கள் என்றும், நாளை அவர்களுக்கும் பெண் குழந்தை பிறப்பாள் என்றும், நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.

Khushbu loses cool after being abused on Twitter, "I know but some need to be slapped hard to realise they are born to a woman n will have daughters tmrw..thanks."

அடுத்த செய்தி

டிரெண்டிங்