ஆப்நகரம்

மாரடைப்பால் காலமான பிரபல திகில்பட இயக்குனர் துளசி ராம்சே!

பாலிவுட்டின் பிரபல திகில் பட இயக்குனர் துளசி ராம்சே நேற்று நெஞ்சு வலியால் காலமானார்.

Samayam Tamil 15 Dec 2018, 3:47 pm
பாலிவுட் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருந்து வலம் வந்தவர் துளசி ராம்சே. இவர் திகில் படங்களை இயக்குவதில் வல்லவர். தற்போது அவருக்கு 77 வயதாகிறது. இவர் மும்பை அந்தேரி பகுதியில் உள்ள அடுக்கமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. அதைத்தொர்ந்து அவரது குடும்பத்தினர் அவரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.
Samayam Tamil tusi-ramsay


அவரது இறுதி சடங்கில் ஏராளமான பாலிவுட் திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர். மறைந்த இயக்குனர் துளசி ராம்சே வீரானா, புரானி ஹவேலி, பந்த் தர்வாசா உள்பட பல திகில் படங்களை இயக்கி யுள்ளார். ராம்சே சகோதரர்களான துளசி ராம்சேயும், அவரது 6 சகோதரர்களும் பேய்க் கதைகள் இயக்கியதன் மூலம் பாலிவுட் சினிமாவில் புகழ் பெற்று வந்தனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்