கடந்த மார்ச் மாதத்தில் இருந்து கொரோனா வைரஸ் பிரச்சனையாக உள்ளது. திரையுலகை சேர்ந்தவர்கள் தங்ளுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அவ்வப்போது அறிவிப்பதை பார்க்க முடிகிறது. சிலர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்துக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது. அவரை சென்னையில் இருக்கும் மியாட் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். விஜயகாந்துக்கு ஏற்கனவே உடல்நலம் சரியில்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். இந்நிலையில் அவருக்கு கொரோனா பாதிப்பு என்று தெரிந்தவுடன் சினிமா ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.
கேப்டன் விரைவில் குணமாகி வீடு திரும்ப கடவுளிடம் பிரார்த்தனை செய்வதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளனர். விஜயகாந்தின் நல்ல மனசுக்கு அவர் குணமாகிவிடுவார் என்றாலும், அவருக்கு ஏற்கனவே உடல்நலக் கோளாறு இருப்பது தான் கவலை அளிக்கிறது என்கிறார்கள் ரசிகர்கள்.
விஜயகாந்த் பழைய பன்னீர்செல்வமாக திரும்பி வர வேண்டும் என்று எதிர்பார்த்த நிலையில் அவருக்கு போய் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதே என்று பலர் கவலையில் இருக்கிறார்கள்.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களை அடக்கம் செய்ய தன் கல்லூரியில் இடம் கொடுத்தவர் விஜயகாந்த். இதை பார்த்த தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் உள்பட பலர் விஜயகாந்தை பாராட்டினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கடந்த மாதம் 5ம் தேதியில் இருந்து மருத்துவமனையில் இருக்கிறார். தீவிர சிகிச்சைப் பிரிவில் கவலைக்கிடமாக இருந்த அவர் தற்போது நலமாக உள்ளார். விரைவில் வீடு திரும்பிவிடுவார் என்று ரசிகர்கள் சந்தோஷத்தில் உள்ளனர்.
இந்நிலையில் விஜயகாந்த் கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வீட்டிலேயே இருந்த அவருக்கு எப்படி கொரோனா பாதிப்பு ஏற்பட்டது என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
கில்லி, தூள் பட நடிகர் ரூபன் கொரோனாவால் மரணம்!
இந்நிலையில் நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்துக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது. அவரை சென்னையில் இருக்கும் மியாட் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். விஜயகாந்துக்கு ஏற்கனவே உடல்நலம் சரியில்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். இந்நிலையில் அவருக்கு கொரோனா பாதிப்பு என்று தெரிந்தவுடன் சினிமா ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.
கேப்டன் விரைவில் குணமாகி வீடு திரும்ப கடவுளிடம் பிரார்த்தனை செய்வதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளனர். விஜயகாந்தின் நல்ல மனசுக்கு அவர் குணமாகிவிடுவார் என்றாலும், அவருக்கு ஏற்கனவே உடல்நலக் கோளாறு இருப்பது தான் கவலை அளிக்கிறது என்கிறார்கள் ரசிகர்கள்.
விஜயகாந்த் பழைய பன்னீர்செல்வமாக திரும்பி வர வேண்டும் என்று எதிர்பார்த்த நிலையில் அவருக்கு போய் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதே என்று பலர் கவலையில் இருக்கிறார்கள்.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களை அடக்கம் செய்ய தன் கல்லூரியில் இடம் கொடுத்தவர் விஜயகாந்த். இதை பார்த்த தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் உள்பட பலர் விஜயகாந்தை பாராட்டினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கடந்த மாதம் 5ம் தேதியில் இருந்து மருத்துவமனையில் இருக்கிறார். தீவிர சிகிச்சைப் பிரிவில் கவலைக்கிடமாக இருந்த அவர் தற்போது நலமாக உள்ளார். விரைவில் வீடு திரும்பிவிடுவார் என்று ரசிகர்கள் சந்தோஷத்தில் உள்ளனர்.
இந்நிலையில் விஜயகாந்த் கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வீட்டிலேயே இருந்த அவருக்கு எப்படி கொரோனா பாதிப்பு ஏற்பட்டது என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
கில்லி, தூள் பட நடிகர் ரூபன் கொரோனாவால் மரணம்!