ஆப்நகரம்

Pollachi Video: குறிப்பிட்ட வயது வரை நட்புகள் வேண்டாம்: நடிகர் சங்கம்!

பொள்ளாச்சியில் இளம் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக நடிகர் சங்கம் அதிரடியாக அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது.

Samayam Tamil 13 Mar 2019, 5:24 pm
பொள்ளாச்சியில் இளம் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக நடிகர் சங்கம் அதிரடியாக அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது.
Samayam Tamil nadi


கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் ஃபேஸ்புக் மூலம் ஏற்பட்ட பழக்கத்தால் இளம் பெண்ணுக்கு நடந்த விபரீதம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இதுதொடர்பான வழக்கில் திருநாவுக்கரசு, சதீஷ், சபரிராஜன் மற்றும் வசந்தகுமார் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பல ஆண்டுகளாக இது போன்ற பல குற்றச்சமபவங்களை அரங்கேற்றி வந்தது தெரியவந்துள்ளது. மேலும் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், சுமார் 20 பேருடன் இந்த கும்பல் இயங்கி வந்ததாகவும் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து, குற்றவாளிகளுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது, சினிமா பிரபலங்கள் முதல் அரசியல் பிரபலங்கள் வரை பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில், தென்னிந்திய நடிகர் சங்கமும் தற்போது குரல் கொடுத்துள்ளது. அந்த வகையில், நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கடந்த சில தினங்களாக ஊடகங்களிலும், பத்திரிக்கைகளிலும் வரும் பொள்ளாச்சியில் நடந்த பாலியல் சம்பவங்கள் மனதை கலங்க வைத்துள்ளது. இந்த செயலின் பின்னணியில் உள்ளவர்களை விரைவாக கண்டறிந்து அவர்கள் சமூகத்தில் எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தாலும் கடுமையான தண்டனையை பெற்றுத்தர வேண்டும் என்று காவல்துறையிடம் கோரிக்கை வைக்கிறோம்.

ஸ்மார்ட்போன்களின் வளர்ச்சியில் உள்ள ஆபத்துகளை உணர்ந்து இளைஞர்கள் செயல்பட வேண்டும். நம்மை வழி நடத்துவதில், நம் பெற்றோருக்கும் முக்கிய பங்கு உள்ளது. அதனால்,

அடுத்த செய்தி

டிரெண்டிங்