ஆப்நகரம்

பெயரை வெளியிட வேண்டாம்: FEFSIக்கு 25 லட்சம் நன்கொடை அளித்த நட்சத்திரம் யார்?

ஒரு முக்கிய சினிமா பிரபலம் 25 லட்சம் நன்கொடை அளித்துவிட்டு, தனது பெயரை கூறவேண்டாம் என கூறியதாக FEFSI தலைவர் கூறியுள்ளார்.

Samayam Tamil 8 Apr 2020, 3:29 pm
நேற்று தல அஜித் கொரோனா நிவாரண நிதியாக மொத்தம் 1.25 கோடி ரூபாய் அளித்துள்ளார் என்கிற அறிவிப்பு வந்தது. அதில் 50 லட்சம் முதலமைச்சர் நிவாரண நிதிக்கும், மேலும் 50 லட்சம் PM Cares நிதிக்கும் வழங்கியுள்ளார். அது மட்டுமின்றி சினிமா தொழிலாளர்களின் சங்கமான FEFSIக்கு 25 லட்சம் அளித்துள்ளார்.
Samayam Tamil R.K.Selvamani


கொரோனா காரணமாக எந்த படத்தின் ஷூட்டிங்கும் நடைபெறவில்லை. அதனால் சினிமாவை நம்பி இருந்த தொழிலாளர்கள் வேலை இழந்து உள்ளனர். அவர்களுக்கு உதவ முன் வர வேண்டும் என சினிமா நட்சத்திரங்களுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. அதை ஏற்று பல நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என பலரும் நன்கொடை அளித்தனர். சூர்யா குடுமபம், ரஜினி, சிவகார்த்திகேயன் உட்பட பலரும் உதவி அளித்தனர். கடைசியாக நேற்று தல அஜித் 25 லட்சம் கொடுத்துள்ளார்.

இந்த வகையில் சங்கத்திற்கு கிடைத்துள்ள உதவி தொகை எவ்வளவு என்கிற விவரத்தை FEFSI தலைவர் ஆர்.கே.செல்வமணி வெளியிட்டுள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் நன்கொடை அறிவித்த அனைவருக்கும் அன்றி தெரிவித்தார்.

அஜித் அளித்த 25 லட்சம் ரூபாயோடு சேர்த்து தற்போது வரை 2 கோடி 45 லட்சம் ருபாய் வந்துள்ளது. அதோடு 2400 மூட்டை அரிசியும் வந்துள்ளது என கூறியுள்ளார்.

மேலும் வந்துள்ள இந்த தொகையில் 25 லட்சம் ருபாய் திரைப்பட துறையை சேர்ந்த ஒரு முக்கிய நபர் அளித்தது. ஆனால் அவர் பெயரை கூற வேண்டாம் என நிபந்தனை விதித்துள்ளார். அதனால் அவரது பெயரை நாங்கள் வெளியிட விரும்பவில்லை என ஆர்.கே.செல்வமணி தெரிவித்துளளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்