இந்தியா முழுவதும் மக்கள் அனைவரும் கொரோனா லாக்டவுனில் இருக்கின்றனர். வீட்டுக்குள்ளேயே மாதக் கணக்கில் இருந்து என்ன செய்வது என தெரியாமல் மக்கள் டிவி, திரைப்படங்கள், வெப் சீரிஸ், வீட்டுக்குள்ளேயே விளையாட்டு என பல விஷயங்களை செய்து வருகின்றனர்.
தற்போது கிடைத்துள்ள இந்த ஃபிரீ டைமை வீணாக்காமல் நடிகர் சாந்தனு மற்றும் கீர்த்தி இருவரும் இணைத்து வீட்டிலேயே ஒரு குறும்படத்தை எடுத்து வெளியிட்டுள்ளனர். கொஞ்சம் கொரோனா நிறைய காதல் என பெயரிடப் பட்டுள்ள அந்த குறும்படத்தில் அவர்கள் இருவர் மட்டுமே நடித்துள்ளனர். எழுதி, இயக்கியது மட்டுமின்றி இந்த படத்திற்கான எடிட்டிங் பணிகளையும் சாந்தனு தான் செய்துள்ளார்.
அனைவரும் வீட்டிலேயே இருக்கும் பெண்கள் மட்டும் வழக்கம் போல சமைப்பது உள்ளிட்ட பல வேலைகளை செய்து கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு மற்றவர்களும் உதவலாமே என்கிற கருத்தை பதிவு செய்துள்ளனர்.
காலையில் எழுந்து காபி போட்டு, சமையல் செய்து, வீட்டை சுத்தம் செய்து, மீண்டும் மதியம் சமையல் செய்வது என சாந்தனு வீட்டு வேலைகளை செய்கிறார். பின்னர் தான் அதிர்ச்சியில் எழும் போது அது கனவு என்பது புரிகிறது. ஒரு நாள் கனவில் அவர்களை போல இருப்பதற்கே கஷ்டமாக இருக்கே, அவர்கள் எப்படி வாழக்கை முழுவதும் இருப்பார்கள். மற்றவர்கள் அவர்களுக்கு சில விஷயங்களிலாவது உதவலாமே என மெசேஜை கூறுகிறார் சாந்தனு.
முழுக்க முழுக்க மொபைலில் எடுக்க பட்ட படம் இது. அதற்கு தற்போது ரசிகர்கள் கமெண்டுகளில் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக வீட்டில் அயராமல் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பணியாற்றிக் கொண்டிருக்கும் பெண்களை கவுரவப்படுத்தும் வகையில் இது இருப்பது பலராலும் பாராட்டப் படுகிறது.
இதே போல பல வீடியோக்களை எதிர்பார்ப்பதாகவும் ரசிகர்கள் கமெண்டுகளில் கூறியுள்ளனர்.
சாந்தனு மற்றும் கீர்த்திக்கு ஆகஸ்ட் 21 2015ம் திருமணம் நடைபெற்றது. அவர்களது திருமணத்தை தளபதி விஜய் தான் தாலி எடுத்து கொடுத்து செய்துவைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சாந்தனு நடிகர் விஜய்யின் தீவிர ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துள்ள மாஸ்டர் பாடத்திலும் ஒரு முக்கிய ரோலில் நடித்துள்ளார்.
சமீபத்தில் இது பற்றி சாந்தனு அளித்த பேட்டியில் ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய்யை தளபதியாக பார்க்க முடியாது, எப்போதும் சாதாரணமாக அமர்ந்து இருப்பார். தனது ஷாட் இல்லை என்றாலும் பிரேக் விடும்வரை அங்கேயே அமர்ந்திருப்பார். அங்கிருக்கும் பலரை கூப்பிட்டு பேசுவார் என சாந்தனு கூறியுள்ளார்.
மாஸ்டர் மட்டுமின்றி தன் கைவசம் மேலும் சில படங்களை வைத்திருக்கிறார் சாந்தனு. கசட தபற, ராவண கூட்டம் ஆகிய படங்களில் அவர் நடிக்கிறார். அதுல்யா ரவி உடன் ஒரு பெயரிடப்படாத படத்திலும் சாந்தனு நடித்து வருகிறது.
நடிப்பது மட்டுமின்றி கிரிக்கெட்டிலும் அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார் சாந்தனு. தனது பழைய புகைப்படங்கள் சில வற்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட சாந்தனு கிரிக்கெட் விளையாடுவதை மிஸ் செய்வதாக தெரிவித்துள்ளார். கொரோனா லாக்டவுன் முடிந்து இன்னும் பிட்தாகவும் வலிமையாகவும் திரும்ப விளையாட வருவேன என்றும் சாந்தனு கூறியிருந்தார்.
தற்போது கிடைத்துள்ள இந்த ஃபிரீ டைமை வீணாக்காமல் நடிகர் சாந்தனு மற்றும் கீர்த்தி இருவரும் இணைத்து வீட்டிலேயே ஒரு குறும்படத்தை எடுத்து வெளியிட்டுள்ளனர். கொஞ்சம் கொரோனா நிறைய காதல் என பெயரிடப் பட்டுள்ள அந்த குறும்படத்தில் அவர்கள் இருவர் மட்டுமே நடித்துள்ளனர். எழுதி, இயக்கியது மட்டுமின்றி இந்த படத்திற்கான எடிட்டிங் பணிகளையும் சாந்தனு தான் செய்துள்ளார்.
அனைவரும் வீட்டிலேயே இருக்கும் பெண்கள் மட்டும் வழக்கம் போல சமைப்பது உள்ளிட்ட பல வேலைகளை செய்து கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு மற்றவர்களும் உதவலாமே என்கிற கருத்தை பதிவு செய்துள்ளனர்.
காலையில் எழுந்து காபி போட்டு, சமையல் செய்து, வீட்டை சுத்தம் செய்து, மீண்டும் மதியம் சமையல் செய்வது என சாந்தனு வீட்டு வேலைகளை செய்கிறார். பின்னர் தான் அதிர்ச்சியில் எழும் போது அது கனவு என்பது புரிகிறது. ஒரு நாள் கனவில் அவர்களை போல இருப்பதற்கே கஷ்டமாக இருக்கே, அவர்கள் எப்படி வாழக்கை முழுவதும் இருப்பார்கள். மற்றவர்கள் அவர்களுக்கு சில விஷயங்களிலாவது உதவலாமே என மெசேஜை கூறுகிறார் சாந்தனு.
முழுக்க முழுக்க மொபைலில் எடுக்க பட்ட படம் இது. அதற்கு தற்போது ரசிகர்கள் கமெண்டுகளில் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக வீட்டில் அயராமல் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பணியாற்றிக் கொண்டிருக்கும் பெண்களை கவுரவப்படுத்தும் வகையில் இது இருப்பது பலராலும் பாராட்டப் படுகிறது.
இதே போல பல வீடியோக்களை எதிர்பார்ப்பதாகவும் ரசிகர்கள் கமெண்டுகளில் கூறியுள்ளனர்.
சாந்தனு மற்றும் கீர்த்திக்கு ஆகஸ்ட் 21 2015ம் திருமணம் நடைபெற்றது. அவர்களது திருமணத்தை தளபதி விஜய் தான் தாலி எடுத்து கொடுத்து செய்துவைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சாந்தனு நடிகர் விஜய்யின் தீவிர ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துள்ள மாஸ்டர் பாடத்திலும் ஒரு முக்கிய ரோலில் நடித்துள்ளார்.
சமீபத்தில் இது பற்றி சாந்தனு அளித்த பேட்டியில் ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய்யை தளபதியாக பார்க்க முடியாது, எப்போதும் சாதாரணமாக அமர்ந்து இருப்பார். தனது ஷாட் இல்லை என்றாலும் பிரேக் விடும்வரை அங்கேயே அமர்ந்திருப்பார். அங்கிருக்கும் பலரை கூப்பிட்டு பேசுவார் என சாந்தனு கூறியுள்ளார்.
மாஸ்டர் மட்டுமின்றி தன் கைவசம் மேலும் சில படங்களை வைத்திருக்கிறார் சாந்தனு. கசட தபற, ராவண கூட்டம் ஆகிய படங்களில் அவர் நடிக்கிறார். அதுல்யா ரவி உடன் ஒரு பெயரிடப்படாத படத்திலும் சாந்தனு நடித்து வருகிறது.
நடிப்பது மட்டுமின்றி கிரிக்கெட்டிலும் அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார் சாந்தனு. தனது பழைய புகைப்படங்கள் சில வற்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட சாந்தனு கிரிக்கெட் விளையாடுவதை மிஸ் செய்வதாக தெரிவித்துள்ளார். கொரோனா லாக்டவுன் முடிந்து இன்னும் பிட்தாகவும் வலிமையாகவும் திரும்ப விளையாட வருவேன என்றும் சாந்தனு கூறியிருந்தார்.