ஆப்நகரம்

Nayanthara:இதுக்கெல்லாம் காரணம் நயன்தாரா தான்: விக்னேஷ் சிவன்

கூழாங்கல் படத்தை நாம் தயாரிப்போம் என்று சொன்னதே நயன்தாரா தான் என இயக்குநர் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 24 Oct 2021, 11:28 am

ஹைலைட்ஸ்:

  • ஆஸ்கருக்கு செல்லும் கூழாங்கல்
  • கூழாங்கல் படத்தை தயாரித்த நயன்தாரா, விக்னேஷ் சிவன்
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil nayanthara
பி.எஸ். வினோத் ராஜ் இயக்கத்தில், நயன்தாரா, விக்னேஷ் சிவன் தயாரிப்பில் உருவாகிய கூழாங்கல் படம் இந்தியா சார்பில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது.
நயன்தாரா, விக்னேஷ் சிவன் வீட்டுல விசேஷமுங்க: குவியும் வாழ்த்துக்கள்இது குறித்து விக்னேஷ் சிவன் கூறியதாவது,
வினோத்ராஜ் தன் வாழ்க்கையில் பார்த்ததை வைத்து படம் இயக்கினார். அந்த படம் சுமார் 30 திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டது. படத்தை பார்த்த அனைவரும் இம்பிரஸ் ஆனார்கள். ரோட்டர்டாமில் வெற்றி பெற்றுவிட்டதால் பிற விழாக்களில் போட்டியில் இல்லை. ஆனால் படத்தை பார்த்த நடுவர்கள் அனைவரும் அதை பாராட்டி பேசியிருக்கிறார்கள்.

கூழாங்கல் படம் முடிக்கப்படாமல் இருந்த நிலையில் தயாரிப்பாளர் தேவை என்று இயக்குநர் ராம் சார் தான் எங்களிடம் கூறினார். அதுவரை எடுக்கப்பட்ட காட்சிகளை நானும், நயனும் பார்த்தோம். இந்த படத்தை நாம் தயாரிப்போம் என்று முடிவு செய்தது நயன் தான்.

படத்தை முடித்த பிறகு ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொள்ள விண்ணப்பித்தோம். அங்கு எங்கள் படத்திற்கு விருது கிடைக்கும் என்று நினைக்கவில்லை. அந்த படத்திற்கு டைகர் விருது கிடைத்தது.

நாங்கள் தயாரித்த முதல் படமே ஆஸ்கருக்கு செல்வது சந்தோஷமாக இருக்கிறது. எங்கள் படத்தை யார் பார்த்தாலும் அவர்களுக்கு பிடித்துவிடும். மணிரத்னம், வெற்றிமாறன் என்று பல இயக்குநர்களுக்கும் பிடித்திருக்கிறது என்றார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்