ஆப்நகரம்

கோடீஸ்வரி நிகழ்ச்சியில் ரூ. 1 கோடி வென்ற மாற்றுத்திறனாளி கௌசல்யா: உலக சாதனை

ராதிகா சரத்குமார் தொகுத்து வழங்கும் கோடீஸ்வரி நிகழ்ச்சியில் மதுரையை சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண் ரூ. 1 கோடி வென்றுள்ளார்.

Samayam Tamil 21 Jan 2020, 2:42 pm
ராதிகா சரத்குமார் தொகுத்து வழங்கும் கோடீஸ்வரி நிகழ்ச்சியில் மதுரையை சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண் ரூ. 1 கோடி வென்றுள்ளார்.
Samayam Tamil kousalya kharthika wins rs 1 crore in kodeeswari show
கோடீஸ்வரி நிகழ்ச்சியில் ரூ. 1 கோடி வென்ற மாற்றுத்திறனாளி கௌசல்யா: உலக சாதனை


கோடீஸ்வரி

கலர்ஸ் தொலைக்காட்சியில் பெண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் கோடீஸ்வரி நிகழ்ச்சி கடந்த மாதம் முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியை ராதிகா சரத்குமார் தொகுத்து வழங்கி வருகிறார். அவர் கேட்கும் 15 கேள்விகளுக்கு சரியான பதில் அளித்தால் ரூ. 1 கோடி பரிசு வெல்லலாம். அந்த நிகழ்ச்சியில் முதல் முறையாக ஒருவர் ரூ. 1 கோடி வென்றுள்ளார்.

கௌசல்யா

மதுரையை சேர்ந்த வாய் பேச முடியாத, காது கேளாத கௌசல்யா கார்த்திகா(31) என்பவர் கலந்து கொண்டு ரூ. 1 கோடி வென்றுள்ளார். இது போன்ற நிகழ்ச்சியில் ரூ. 1 கோடி வென்ற முதல் மாற்றுத்திறனாளி என்கிற சாதனையை படைத்துள்ளார் கௌசல்யா. கௌசல்யா பி.எஸ்.சி., எம்.எஸ்.சி. மற்றும் எம்.பி.ஏ. படித்துள்ளார். அவர் மதுரையில் உள்ள தலைமை மாவட்ட நீதிமன்றத்தில் ஜூனியர் உதவியாளராக உள்ளார்.

நான் ஒரு கோடீஸ்வரி

கோடீஸ்வரி ஆனது குறித்து கௌசல்யா கூறியதாவது, கோடீஸ்வரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டது பெருமையாக உள்ளது. நான் ஒரு கோடீஸ்வரி என்று தற்போது பெருமையாக கூறுவேன். என் குடும்பத்தார் எனக்கு பக்கதுணையாக உள்ளனர். எனக்கு இந்த வாய்ப்பை அளித்த சேனலுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பெற்ற பிள்ளையின் குரலை கூட கேட்க முடியாமல் வாழ்பவர்களுக்கு உதவி செய்ய விரும்புகிறேன். என் குடும்பத்தாருடன் சுவிட்சர்லாந்துக்கு செல்ல விரும்புகிறேன் என்றார்.

ராதிகா

நான் கோடீஸ்வரி ஆனதில் மகிழ்ச்சி என்று கௌசல்யா எழுதிக் காட்டியதை பார்த்து அங்கிருந்த அனைவருக்கும் கண் கலங்கிவிட்டது. கௌசல்யா பற்றி ராதிகா கூறியதாவது, அவர் என் உதட்டு அசைவை புரிந்து கொண்டு பதில் அளித்தார். பல கஷ்டங்களை சந்தித்த ஒரு பெண் கோடீஸ்வரி ஆனது தமிழகத்திற்கு பெருமை ஆகும். அவர் நல்லபடியாக வாழ வாழ்த்துகிறேன் என்றார். கௌசல்யா வெற்றி பெற்றதை பார்த்து பல பெண்களுக்கு வாழ்க்கை மீது நம்பிக்கை வந்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்