ஆப்நகரம்

Suriya:சூர்யாவை பார்க்கும்போது என்ன பண்ணுவேனோ?: குஷியில் விஜய் சேதுபதி 'மகள்'

சூர்யாவின் தீவிர ரசிகை என்பதால் முதல் நாள் ஷூட்டிங்கின்போது என்ன செய்யப் போகிறேன் என தெரியவில்லை என்கிறார் க்ரித்தி ஷெட்டி.

Samayam Tamil 31 Mar 2022, 10:19 am
பாலாவின் சூர்யா 41 படத்தில் நடிப்பது குறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார் க்ரித்தி ஷெட்டி.
Samayam Tamil krithi shetty is excited to act in suriya 41
Suriya:சூர்யாவை பார்க்கும்போது என்ன பண்ணுவேனோ?: குஷியில் விஜய் சேதுபதி 'மகள்'



க்ரித்தி ஷெட்டி

உப்பேனா தெலுங்கு படம் மூலம் நடிகையானவர் க்ரித்தி ஷெட்டி. அந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு மகளாக நடித்திருந்தார். இந்நிலையில் பாலா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படத்தில் க்ரித்தி ஷெட்டி தான் ஹீரோயின். சூர்யா 41 என்று அழைக்கப்படும் அந்த படத்தின் ஷூட்டிங் கன்னியாகுமரியில் நடந்து வருகிறது.

தமிழ்

சூர்யா 41 படத்தில் நடிப்பது குறித்து க்ரித்தி ஷெட்டி கூறியதாவது, லிங்குசாமி படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதுமே தமிழ் கற்கத் துவங்கிவிட்டேன். தமிழ் மிகவும் அருமையான மொழி. அது எனக்கு புது பாஷை. தமிழ் படங்களில் நடிக்கும்போது நன்றாக தமிழில் பேச வேண்டும் என்று விரும்புகிறேன் என்றார்.

பாலா

என் புகைப்படம் ஒன்றை பார்த்து பாலா சாருக்கு பிடித்துவிட்டது. சென்னை வந்து அவரை சந்தித்தேன். என் கதாபாத்திரம் மிகவும் அழகானது. அதே சமயம் சவாலானதும் கூட. ஆனால் எனக்கு சவால்கள் பிடிக்கும். பாலா சார் படத்தில் நடிக்க காத்துக் கொண்டிருக்கிறேன் என்கிறார் க்ரித்தி ஷெட்டி.

சூர்யா

எனக்கு பிடித்த நடிகர்களில் சூர்யா சாரும் ஒருவர். அவர் நடித்த பல படங்களை பார்த்திருக்கிறேன். அவர் மீது அதிக மரியாதை உண்டு. நான் அவரின் தீவிர ரசிகை. அதனால் முதல்நாள் படப்பிடிப்பில் என்ன செய்யப் போகிறேன் என்றே தெரியவில்லை என்று க்ரித்தி ஷெட்டி தெரிவித்துள்ளார். ஏப்ரல் 3ம் தேதி படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார் க்ரித்தி.

அடுத்த செய்தி

டிரெண்டிங்