ஆப்நகரம்

கும்பகோணம் தீ விபத்தின் போது தல அஜித் என்ன செய்தார்?

கும்பகோணத்தில் ஏற்பட்ட தீ விபத்தை யாராலும் மறந்திருக்க முடியாது.

TNN 26 Apr 2017, 5:14 pm
கும்பகோணத்தில் ஏற்பட்ட தீ விபத்தை யாராலும் மறந்திருக்க முடியாது.
Samayam Tamil kumbakonam fire accident thala ajith helping students family
கும்பகோணம் தீ விபத்தின் போது தல அஜித் என்ன செய்தார்?


தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் காசிராமன் தெருவில் இயங்கி வந்த கிருஷ்ணா பள்ளியில் கடந்த 2004ம் ஆண்டு ஜூலை 16ம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. இதில் 94 குழந்தைகள் உடல் கருகி உயிரிழந்தனர்.

இந்த தீ விபத்து சம்பத்தின் போது தல அஜித்தும் ஜி படத்தின் படப்பிடிப்பிற்காக கும்பகோணத்தில் இருந்துள்ளார். அப்போது இந்த தீ விபத்து குறித்து அறிந்த அவர், உடனே அவர்களுக்கு நிதியுதவி வழங்கியுள்ளார். அதோடு, தன் ரசிகர்களுக்கும் ஒரு வேண்டுகோள் வைத்துள்ளார். அதில், தன்னுடன் சேர்ந்து புகைப்படம் எடுக்கும் ரசிகர்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

அதன் மூலம் கிடைத்த ஒட்டுமொத்த பணத்தை அப்படியே பாதிக்கப்பட்ட குழந்தைகளின் குடும்பங்களுக்கு கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்