ஆப்நகரம்

20 பேர் முன்னிலையில் லாக்டவுனில் காதலியை மணந்த கும்கி அஸ்வின்

கும்கி படம் புகழ் அஸ்வினுக்கும், அவரின் காதலியான வித்யாஸ்ரீக்கும் லாக்டவுனுக்கு மத்தியில் சென்னையில் திருமணம் நடைபெற்றது.

Samayam Tamil 25 Jun 2020, 10:19 am
ஆர்யா, சந்தானம் உள்ளிட்டோர் நடித்த பாஸ் என்கிற பாஸ்கரன் படம் மூலம் நடிகர் ஆனவர் அஸ்வின் ராஜா. ஆனால் விக்ரம் பிரபுவின் கும்கி படம் மூலம் தான் அஸ்வினுக்கு பெயரும், புகழும் கிடைத்தது. இதனால் ரசிகர்கள் அவரை கும்கி அஸ்வின் என்று அழைத்து வருகிறார்கள்.
Samayam Tamil ashwin


லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் சுவாமிநாதனின் மகன் அஸ்வின். படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வரும் அஸ்வினுக்கும், அமெரிக்காவில் முதுகலை பட்டம் பெற்ற வித்யாஸ்ரீக்கும் இடையே காதல் ஏற்பட்டது. அஸ்வினும், வித்யாவும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தார்கள்.

காதலை வீட்டில் சொல்லி திருமணத்திற்கு அனுமதி வாங்கினார்கள். இதையடுத்து அஸ்வின், வித்யாஸ்ரீயின் திருமணம் நேற்று சென்னையில் நடைபெற்றது. சென்னையில் கொரோனா வைரஸ் பிரச்சனை பெரிதாக இருப்பதால் கடந்த 19ம் தேதியில் இருந்து முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

லாக்டவுனால் அஸ்வின், வித்யாஸ்ரீயின் திருமணத்தில் இரு வீட்டார், நெருங்கிய நண்பர்கள் என்று 20 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். திருமணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அஸ்வின், வித்யாஸ்ரீயை வாழ்த்தியுள்ளனர்.

லாக்டவுன் நேரத்தில் ஒரே மரண செய்தியாக வந்து கொண்டிருக்கும் நேரத்தில் அஸ்வினின் திருமண புகைப்படங்களை பார்த்தவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பெரிய வீட்டுப் பையனின் திருமணம் எப்படி எளிமையாக நடந்திருக்கிறது. கொரோனா வைரஸ் பிரச்சனையால் அஸ்வினுக்கு பணம் மிச்சம் தான். அஸ்வினின் திருமணத்தை எப்படி எல்லாம் நடத்த அவரின் பெற்றோர் ஆசைப்பட்டார்களோ. ஆனால் இந்த கொரோனா வைரஸ் யாரையும் அவர்கள் இஷ்டப்படி செயல்பட விடுவது இல்லை. அனைவரும் தன் இஷ்டப்படி தான் நடக்க வைக்கிறது என்று சமூக வலைதளவாசிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் இருக்கவே பயமாக இருக்கிறது. சென்னையில் இருந்து கிளம்பி சொந்த ஊருக்கு செல்லவும் வழியில்லை. தற்போது எல்லாம் சென்னையில் இருந்து வருகிறோம் என்று கூறினாலே ஆளாளுக்கு தெறித்து ஓடுகிறார்கள். எப்படி இருந்த எங்களின் நிலைமை இப்படி ஆகிவிட்டதே என்று சென்னைவாசிகள் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

லாக்டவுனில் சினிமா பிரபலம் ஒருவருக்கு திருமணம் நடந்துள்ளது இது ஒன்றும் முதல் முறை அல்ல. இந்நிலையில் நாளை மறுநாள் வனிதா விஜயகுமார், இயக்குநர் பீட்டர் பாலின் திருமணம் நடைபெறவிருக்கிறது. லாக்டவுன் என்பதால் வீட்டில் வைத்து தான் அவர்களின் திருமணம் நடக்கிறது. இந்த திருமணத்தில் ஒரு சிலரே கலந்து கொள்கிறார்கள்.

தனது பெற்றோரின் திருமண நாளான ஜூன் 27ம் தேதியை தன் திருமண தேதியாக தேர்வு செய்துள்ளார் வனிதா விஜயகுமார். இந்நிலையில் வனிதா பீட்டர் பாலின் பெயரை தன் கையில் பச்சை குத்தியிருக்கிறார். அதே போன்று பீட்டரும் வனிதாவின் பெயரை தன் கையில் பச்சை குத்தியிருக்கிறார். இது வனிதாவின் மூன்றாவது திருமணம் ஆகும்.

இந்த திருமணமாவது கடைசி வரை நிலைத்து நிற்க வேண்டும் என்று வனிதாவின் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். முதல் இரண்டு திருமணங்கள் மூலம் வனிதாவுக்கு விஜய ஸ்ரீஹரி என்கிற மகனும், ஜோவிகா, ஜெய்நிதா என்கிற மகள்களும் இருக்கிறார்கள்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்