ஆப்நகரம்

இயக்குனருக்காக விட்டுக் கொடுத்த குஞ்சாக்கோ போபனின் பெருந்தன்மை!

மறைந்த இயக்குனருக்காக சம்பளம் வாங்காமல் நடிக்கும் குஞ்சாக்கோ போபனின் பெருந்தன்மை யாருக்கு வரும் என்று பலரும் பேசி வருகின்றனர்.

TNN 28 Dec 2016, 6:36 pm
மறைந்த இயக்குனருக்காக சம்பளம் வாங்காமல் நடிக்கும் குஞ்சாக்கோ போபனின் பெருந்தன்மை யாருக்கு வரும் என்று பலரும் பேசி வருகின்றனர்.
Samayam Tamil kunchacko boban helps for director
இயக்குனருக்காக விட்டுக் கொடுத்த குஞ்சாக்கோ போபனின் பெருந்தன்மை!


நான்கைந்து வருடங்களுக்கு முன் மலையாள இயக்குனர் குஞ்சாக்கோ போபனுக்கு பொருளாதார நெருக்கடி நிலை ஏற்பட்டது. கதாநாயகனாக நடித்த படங்கள் எதுவும் ஓடவில்லை. அந்த குழப்பமான சூழலில் இயக்குனர் ராஜேஷ் பிள்ளை. தன்னிடம் ‘ட்ராபிக்‘ என்கிற கதை இருப்பதாகவும் அதில் கொஞ்சம் வில்லத்தனம் கலந்த டாக்டர் வேடம், அதில் நீங்க நடிக்க முடியுமா என குஞ்சாக்கோவிடம் கேட்டார். ஆரம்பத்தில் யோசித்தார் பின்னர் சம்மதித்து நடித்தார். அந்தப்படம் ஹிட்டாகி குஞ்சாக்கோவின் மார்கெட் சூடு பிடித்தது.

சில வருடங்கள் கழித்து, அதாவது கடந்த வருடம் தான் இயக்கும் ‘வேட்ட’ திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் மீண்டும் குஞ்சாக்கோவை நடிக்க வைத்தார் ராஜேஷ் பிள்ளை. ஆனால் ‘வேட்ட’ படம் வெளியான தினத்தன்றே துரதிர்ஷ்டவசமாக ராஜேஷ் பிள்ளை மரணமடைந்தார். அவரது குடும்பத்திற்கு உதவி செய்ய ராஜேஷ் பிள்ளையிடம் எடிட்டராக பணியாற்றிய மகேஷ் நாராயணன் தற்போது ‘டேக் ஆப்’ என்கிற படத்தை இயக்கிவருகிறார்.

இந்தப்படத்தை ராஜேஷ் பிள்ளையின் சொந்த தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப்படத்தில் கதாநாயகனாக நடிக்கும் குஞ்சாக்கோ போபன், இந்தப்படத்திற்காக இதுநாள் வரை நடித்ததற்காக சம்பளம் எதுவும் வாங்கவில்லை. சம்பளம் பற்றி கேட்டதற்கு படம் வெளியாகட்டும் பார்த்துக் கொள்ளலாம் என்று பெருந்தன்மையாக கூறியுள்ளாராம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்