ஆப்நகரம்

அஜீத்தை விமா்சித்து முகநூலில் பதிவிட்ட குறளரசன் – விளக்கம் அளித்த டி.ஆா்.

நடிகா் அஜீத்தை விமா்சனம் செய்யும் வகையில் முகநூல் பக்கத்தில் கருத்து பதிவிட்டது குறளரசன் கிடையாது என்று டி.ராஜேந்தா் குடும்பத்தினா் விளக்கம் அளித்துள்ளனா்.

Samayam Tamil 19 Mar 2019, 12:38 am
நடிகா் அஜீத்தை விமா்சனம் செய்யும் வகையில் முகநூல் பக்கத்தில் கருத்து பதிவிட்டது குறளரசன் கிடையாது என்று டி.ராஜேந்தா் குடும்பத்தினா் விளக்கம் அளித்துள்ளனா்.
Samayam Tamil Kuralarasan


வெண்ணிலா கபடிக்குழு, ஜீவா, ஆதலால் காதல் செய்வீா் உள்ளிட்ட படங்களை இயக்கியவா் சுசீந்திரன். இவா் அஜீத்தை அரசியலுக்கு வலச்சொல்லி சமூக வலைத்தளத்தில் கருத்து ஒன்றைப் பதிவு செய்திருந்தாா்.

அந்த பதிவில், “40 ஆண்டு கால திராவிட அரசியலில் மாற்றத்தை உருவாக்க உங்கள் ஒருவரால் மட்மே முடியும். தமிழக மக்களின் நலன் கருதி, உங்களை மக்கள் பணிக்கு அழைக்கிறேன். இது தான் 100 சதவிகிதம் சரியான தருணம். வா தலைவா, மாற்றத்தை உருவாக்கு. உங்களுக்காக காத்திருக்கும் பலக்கோடி மக்களில் நானும் ஒருவன்” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்தக் கருத்தை மையப்படுத்தி சிம்புவின் தம்பி குறளரசன் முகநூல் பக்கத்தில் அஜீத்தை கேலி செய்து கருத்தை பதிவிட்டதாக கூறப்பட்டது. ஆனால், அந்த பதிவு குறளரசன் என்ற பெயருக்கு பதிலாக குரான் அரசன் டி.ராஜேந்தர் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

அப்பக்கத்தில் உள்ள பதிவில், எங்கப்பன் தான்யா அடுத்த முதல்வா் தீபா பேரவையுடன் சோ்ந்து லட்சிய திமுக 234 தொகுதிகளையும் கைப்பற்றும் என்றும் பதிவிட்டிருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள சிம்பு தரப்பு, “குறளரசனின் கருத்து Kuran Arasan T.Rajendar என்கிற முகநூல் பக்கத்திலிருந்து எடுக்கப்பட்டிருக்கிறது. இது போலி கணக்கு. Kural Tr என்பதுதான் குறளரசனின் முகநூல் கணக்கு” என்று விளக்கம் கூறியுள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்