ஆப்நகரம்

உதவி கேட்டு உருக்கமான வீடியோ: அஜித், விஜய், ரஜினி மற்றும் கமலுக்கு குட்டி பத்மினி கோரிக்கை

விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்கள் நடிகர் சங்கத்திற்கு உதவி செய்ய முன்வரவேண்டும் என நடிகை குட்டிபத்மினி வீடியோ வெளியிட்டுள்ளார்.

Samayam Tamil 7 Apr 2020, 3:26 pm
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 13 லட்சத்தை விட அதிகமாக உள்ளது. மேலும் இந்தியாவில் தற்போது வரை 4421 நபர்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
Samayam Tamil Kutty Padmini


அதுமட்டுமின்றி தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 21 நாள் ஊரடங்கு மீண்டும் சில வாரங்களுக்கு நீடிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது என்றும் கூறப்படுகிறது.

இந்த ஊரடங்கால் மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளிலேயே முடங்கி இருக்கின்றனர். சினிமா துறை முழுவதும் முடங்கியுள்ளது. கொரோனா ஊரடங்கால் அனைத்து படங்களின் ஷூட்டிங்கும் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. அதனால் அனைத்து நடிகர்கள் மற்றும் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.

சினிமா தொழிலாளர்களின் சங்கமான பெப்சிக்கு நிதி உதவி தரும்படி அதன் தலைவர் ஆர்.கே.செல்வமணி கேட்டுக்கொண்டதால் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் அனைவரும் உதவிக்கரம் நீட்டியிருந்தனர். ரஜினி 50 லட்சம், கமல் 10 லட்சம், சிவகார்த்திகேயன் 10 லட்சம், விஜய் சேதுபதி 10 லட்சம் என பல நடிகர்களும் உதவி செய்தனர்.

அதே போல நடிகர் சங்கத்தின் உறுப்பினர்களுக்கும் உதவுங்கள் என கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் தற்போது வரை முன்னணி நடிகர்கள் யாரும் உதவவில்லை. கார்த்தி 2 லட்சம், சூரி 1 லட்சம், தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் 10 லட்சம் என உதவி செய்துள்ளனர். மற்ற நடிகர்கள் ஒரு சிலர் தங்களால் முடிந்த சில ஆயிரம் ரூபாயை உதவியாக அளித்துள்ளனர்.

அதனால் விஜய், அஜித், ரஜினி, கமல் போன்றவர்கள் உதவ முன்வரவேண்டும் என பிரபல நடிகை குட்டி பத்மினி ட்விட்டரில் வீடியோ வெளியிட்டு உருக்கத்துடன் கேட்டுக்கொண்டுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்