ஆப்நகரம்

ரஜினி படப்பிடிப்பில் மின்சாரம் தாக்கி ஊழியர் பலி!

ரஜினி படப்பிடிப்பில் மின்சாரம் தாக்கி ஊழியர் பலி!

TOI Contributor 22 Jun 2017, 2:17 pm
ரஜினி நடித்து வரும் ‘காலா’ படத்தின் படப்பிடிப்பில் மின்சாரம் தாக்கி ஊழியர் மைக்கேல் என்பவர் பலியானார்.
Samayam Tamil labour died in rajinikanths kaala shooting spot
ரஜினி படப்பிடிப்பில் மின்சாரம் தாக்கி ஊழியர் பலி!


ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் தற்போது நடித்து வரும் படம் ‘காலா’ மும்பையில் தொடங்கிய படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. சென்னை பூந்தமல்லியை அடுத்த பழஞ்சூரில் உள்ள பிலிம்சிட்டியில் ‘காலா’ படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதற்காக அங்கு மும்பை தாராவி போன்ற பிரமாண்ட அரங்கம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

இந்நிலையில், அரங்கம் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பூந்தமல்லியை அடுத்த மேப்பூரைச் சேர்ந்த மைக்கேல் என்பவர் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். அவரை பூந்தமல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் உயிரிழந்தார்.

இறந்த மைக்கேலுக்கு சூர்யா என்ற மனைவியும், மைத்ரேயன் என்ற ஒன்றரை வயது மகனும் உள்ளனர். சூர்யா தற்போது 8 மாத கர்ப்பிணியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்