நடிகரும் இயக்குனருமான தியாகராஜன் மீது பெண் போட்டோகிராபர் பாலியல் தொந்தரவு தந்ததாக புகார் அளித்துள்ளார்.
திரை உலகில் உள்ள பெண்களும், மற்றத் துறைகளில் உள்ள பெண்களும் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொந்தரவுகளை #MeToo என்ற ஹேஸ்டேக்கில் பதிவு செய்து, அனைவரிடமும் பகிர்ந்து வருகின்றனர்.
அந்த வகையில், பாடகி சின்மயி கடந்த சில தினங்களுக்கு முன் பாடலாசிரியர் வைரமுத்து மீது பாலியல் புகார்களை சுமத்தினார். பலரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய இந்த சம்பவத்திற்குப் பிறகு, பல பெண்களும் அவர் மீது பாலியல் புகார்களை சுமத்தினர்.
இதைத் தொடர்ந்து, கன்னட நடிகையான ஸ்ருதி ஹரிஹரன் பிரபல தமிழ் நடிகர் அர்ஜுன், தம்மை அனுமதியின்றி தொட்டதாக, நேற்று தனது பேஸ்புக்கில் பதிவிட்டார்.
இந்நிலையில், நடிகரும் இயக்குநருமான தியாகராஜன் தன்னிடம் தகாத முறையில் நடந்ததாக பெண் போட்டோகிராபர் #MeToo-இல் புகார் கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், பொன்னர்-சங்கர் படத்தில் போட்டோகிராபராக பணியாற்றிய போது, தவறான முறையில் பேசினார் எனவும், நள்ளிரவில் தனது அறையின் கதவைத் தட்டினார் எனவும் கூறியுள்ளார். நடிகர் தியாகராஜன் பிரபல நடிகரான பிரசாந்தின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.
திரை உலகில் உள்ள பெண்களும், மற்றத் துறைகளில் உள்ள பெண்களும் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொந்தரவுகளை #MeToo என்ற ஹேஸ்டேக்கில் பதிவு செய்து, அனைவரிடமும் பகிர்ந்து வருகின்றனர்.
அந்த வகையில், பாடகி சின்மயி கடந்த சில தினங்களுக்கு முன் பாடலாசிரியர் வைரமுத்து மீது பாலியல் புகார்களை சுமத்தினார். பலரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய இந்த சம்பவத்திற்குப் பிறகு, பல பெண்களும் அவர் மீது பாலியல் புகார்களை சுமத்தினர்.
இந்நிலையில், நடிகரும் இயக்குநருமான தியாகராஜன் தன்னிடம் தகாத முறையில் நடந்ததாக பெண் போட்டோகிராபர் #MeToo-இல் புகார் கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், பொன்னர்-சங்கர் படத்தில் போட்டோகிராபராக பணியாற்றிய போது, தவறான முறையில் பேசினார் எனவும், நள்ளிரவில் தனது அறையின் கதவைத் தட்டினார் எனவும் கூறியுள்ளார். நடிகர் தியாகராஜன் பிரபல நடிகரான பிரசாந்தின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.