ஆப்நகரம்

Athi Varadar: விக்னேஷ் சிவன் மற்றும் குடும்பத்தாருடன் அத்தி வரதரை தரிசனம் செய்த நயன்தாரா!

ரஜினிகாந்தைத் தொடர்ந்து நடிகை நயன்தாராவும் தனது காதலன் விக்னேஷ் சிவன் மற்றும் குடும்பத்தாருடன் காஞ்சிபுரம் சென்று அத்தி வரதரை தரிசனம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Samayam Tamil 16 Aug 2019, 10:23 am
தமிழ் சினிமாவில் நம்பர் 1 நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இந்த ஆண்டின் தொடக்கம் முதலே விஸ்வாசம் என்ற வெற்றி படத்தை கொடுத்துள்ளார். அதோடு, வரிசையாக ஐரா, மிஸ்டர் லோக்கல், கொலையுதிர் காலம் ஆகிய படங்கள் வெளியாகின. ஆனால், இதில் எந்தப் படமும் வெற்றிபெறவில்லை. அண்மையில், பல பிரச்சனைகளை தாண்டி, பல மாதங்கள் போராட்டத்துக்குப் பிறகு நயன்தாராவின் கொலையுதிர் காலம் வெளியாகியது. ஆனால், என்ன தோல்வியைத் தான் கொடுத்தது.
Samayam Tamil Nayanthara


இந்த நிலையில், இந்தப் படங்களைத் தொடர்ந்து மாஸ் நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள லவ் ஆக்‌ஷன் டிராமா (மலையாளம்), சாயி ரா நரசிம்ஹா ரெட்டி (தெலுங்கு), விஜய்யின் பிகில் மற்றும் ரஜினியின் தர்பார் ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது. இந்த நிலையில், தனது காதலன் விக்னேஷ் சிவன் மற்றும் குடும்பத்தாருடன் காஞ்சிபுரத்தில் எழுந்தருளியுள்ள அத்தி வரதரை தரிசனம் செய்துள்ளார். அவர், தரிசனம் செய்த போது எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு முன்னதாக நேற்று முன்தினம் நடிகர் ரஜினிகாந்த் அத்தி வரதரை தரிசனம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: இதுவரை இல்லாத மாஸ் ஆக்ஷன்: விஜய் சேதுபதியின் புதிய அவதாரத்தில் சங்கத்தமிழன் டீசர் இதோ!


காஞ்சிபுரம் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வரதராஜ பெருமாள் கோயிலின் குளத்தில் வைக்கப்பட்டிருந்த அத்தி வரதர் 40 ஆண்டுகளுக்குப் பிறகு பலத்த பாதுகாப்பு வசதியுடன் வெளியில் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், ஜூலை 1ம் தேதி தான் அத்தி வரதர் தரிசனம் நடந்துள்ளது. 12ம் தேதி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அத்தி வரதரை தரிசனம் செய்துள்ளார். அப்போது அவருடன் ஆளுநர் பன்வாரிலால் புரோஹ்த், ஆர்பி உதயகுமார் ஆகியோர் பலரும் வந்து அத்தி வரதரை தரிசனம் செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி 29ம் தேதி அத்தி வரதரை தரிசனம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதே போன்று துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வமும் தரிசனம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: அத்தி வரதரை தரிசனம் செய்த ரஜினிகாந்த்!


கடந்த ஜூலை 1ம் தேதி முதல் 48 நாட்களுக்கு பொதுமக்களுக்கு காட்சியளித்து வருகிறார். இன்னும் 48 நாட்களுக்கு அத்தி வரதரை பொதுமக்களின் தரிசனத்திற்காக வைக்கப்பட வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்து வரும் நிலையில், அத்தி வரதர் வைபவம் வரும் 17ம் தேதி முடிகிறது. இதையடுத்து அத்தி வரதர் வெள்ளிப்பேழையில் வைக்கப்பட்டு மீண்டும் குளத்திற்குள் வைக்கப்பட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: Kalaignanam Function: கலைஞானம் விழா மேடையில் சலசலப்பு: பார்வையாளர்களை அதிர வைத்த சிவக்குமார்!


இதற்கு முன்னதாக கடந்த 1979ம் ஆண்டு ஜூலை 2ம் தேதி அத்தி வரதர் குளத்திலிருந்து எடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அத்தி வரதர் மீண்டும் 2059ம் ஆண்டு மக்களுக்கு காட்சி தருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்