ஆப்நகரம்

Kolaiyuthir Kaalam Release: சோதனை மேல் சோதனை: டிக்கெட்டை திரும்ப பெறும் நயன்தாரா ரசிகர்கள்!

நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள கொலையுதிர் காலம் இன்று வெளியாக இருந்த நிலையில், இதுவரை வெளியாகாததால், அவரது ரசிகர்கள் வேதனையுடன் திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

Samayam Tamil 9 Aug 2019, 2:33 pm
இயக்குனர் சக்ரி டோலட்டி இயக்கத்தில் உருவான 3ஆவது படம் கொலையுதிர் காலம். ஏற்கனவே கமல் ஹாசனின் உன்னைப்போல் ஒருவன், அஜித்குமாரின் பில்லா 2 ஆகிய இரு படங்களை இயக்கியுள்ளார். கொலையுதிர் காலம் படத்தின் நயன்தாரா முன்னணி ரோலில் நடித்துள்ளார். இவருடன் இணைந்து பூமிகா, ரோஹினி ஹட்டங்கடி, பிரதாப் போத்தன் ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.
Samayam Tamil Actress Nayanthara


இந்த நிலையில், முதலில் இப்படத்தை தயாரிக்கும் பணியிலிருந்து யுவன் சங்கர் ராஜா வெளியேறினார். அதன் பிறகு இசையமைக்கும் பணியிலிருந்தும் அதிரடியாக வெளியேற படத்திற்கு முதலில் சிக்கல் ஏற்பட்டது. அதன் பிறகு எட்சேடேரா எண்டர்டெயின்மெண்ட் (Etcetera Entertainment) என்ற நிறுவனம் இப்படத்தை தயாரித்தது. இந்நிறுவனத்துடன் நயன்தாராவிற்கு சம்பள பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க, இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ராதாரவி, நயன்தாரா குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது அப்போது பெரும் பிளஸாக அமைந்தது. நயன்தாராவுக்கு ஆதரவாக பலரும் குரல் எழுப்பினர்.

Also Read: Nerkonda Paarvai Collections Day 1: விஸ்வாசம் சாதனையை முறியடித்த நேர்கொண்ட பார்வை: முதல் நாளிலேயே இத்தனை கோடி வசூலா?


Also Read: விஜய்யின் பிகில் படம் மீது கதைத்திருட்டு வழக்கு இன்று தீர்ப்பு!!

கடந்த ஜனவரி மாதத்தில் படத்தை வெளியிட படக்குழுவினர் தீவிர வேலையில் இருந்துள்ளனர். அப்போது பேட்ட மற்றும் விஸ்வாசம் படம் வெளிவர, இப்படம் பிப்ரவரி மாதம் தள்ளிவைக்கப்பட்டது. அப்போது, இப்படத்தின் மீது காப்புரிமை வழக்கு தொடரப்பட படம் மே மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டது. பிறகு ஜூன் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு ஜூலை 26ம் தேதி வெளிவரும் என்று அறிவிப்பு வெளியானது. ஆனால், அப்போதும் படம் வெளிவரவில்லை. இதையடுத்து ஆகஸ்ட் 1ம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில், அப்போதும் வரவில்லை. 2ம் தேதியும் வெளியாகவில்லை. இறுதியில், 9ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு டிக்கெட் புக்கிங்கும் விறுவிறுப்பாக நடந்தது.

Also Read: Dhadak: வைரலாகும் ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூரின் பெல்லி டான்ஸ்!!

ஆனால், இன்று அதிகாலை காட்சி முதல் எந்த ஷோவும் இதுவரை வெளியாகவில்லை. டிக்கெட்டை திருப்பி கொடுத்து ரசிகர்கள் பணத்தை திரும்ப பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. மாலை காட்சி வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். ஆனால், அஜித்தின் நேர்கொண்ட படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வரும் நிலையில், கொலையுதிர் காலம் வெளியானால், படத்தின் வசூல் பாதிக்கப்படும் என்பதால், படம் வெளியாகவில்லை என்று கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்