ஆப்நகரம்

மீடூ பற்றி என்ன சொன்னார் லதா ரஜினிகாந்த்?

தனிப்பட்டவர்களின் வாழ்க்கையில் நாம் தலையிடக்கூடாது என்று லதா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். ​

Samayam Tamil 26 Oct 2018, 3:19 pm
மீடூ விஷயத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமே தங்களது கருத்தை கூற முடியும் என்று லதா ரஜினிகாந்த் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
Samayam Tamil லதா ரஜினிகாந்த்
லதா ரஜினிகாந்த்


தற்போது சினிமா துறையில் மீடூ விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. பாதிக்கப்பட்டவர்கள் புகார்கள் தெரிவிப்பதும், அதற்கு மற்றவர்கள் மறுப்பு தெரிவிப்பதுமாக நடந்து வருகிறது. நடிகைகள் தங்களுக்கு இழைக்கப்பட்ட துன்பங்கள் குறித்து புகார் தெரிவித்து வருகின்றனர். இதனால் இதுவரை வெளிவராத தகவல்கள் அனைத்தும் வெளிவருகிறது. இந்நிலையில் பல பிரபலங்கள் இதுகுறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதனையடுத்து, நடிகர் ரஜினிகாந்த் மனைவி லதா இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''மீடூ விவகாரத்தில் தனிப்பட்டவர்களின் வாழ்க்கையில் நடந்த விஷயங்களை சொல்கிறார்கள். இதில் நான் தலையிடக் கூடாது. பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமே தங்களது கருத்தை கூற முடியும். என்னுடைய விருப்பம் எல்லாம் மோசமான சம்பவங்கள் நடக்கக் கூடாது என்பதுதான். எங்கேயும் தவறு நடக்காமல் நாம் தான் கவனமாக இருக்க வேண்டும். யார் மனதும் புண்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அனைவரும் ஒருங்கிணைந்து இருக்க வேண்டும்’’ என்று தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்