ஆப்நகரம்

கொரோனா பயம்.. இனி அந்த மாதிரி காட்சிகளில் நடிக்கமாட்டேன்: லாவண்யா திரிபாதி

கொரோனா லாக் டவுன் முடிந்து மீண்டும் ஷூட்டிங் துவங்கினாலும் தான் நெருக்கமான காட்சிகளில் நடிக்க மாட்டேன் என லாவண்யா திரிபாதி தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 27 May 2020, 11:05 am
கொரோனா வைரஸ் தொற்று அதிகம் பரவ துவங்கிய நேரத்தில் அதை கட்டுப்படுத்த அரசு முழு அடைப்பை அறிவித்தது. இரண்டு மாதங்களை கடந்து இந்த லாக்டவுன் நீடித்து வருகிறது. அத்தியாவசிய சேவைகள் மற்றும் ஒரு சில துறைகள் மட்டும் சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டுடன் இயங்க அரசு அனுமதி அளித்து வருகிறது.
Samayam Tamil Lavanya Tripathi


சினிமா துறையும் இதனால் முழுமையாக முடங்கியுள்ளது. மீண்டும் சினிமா துறை செயல்பட அரசு எப்போது அனுமதி அளிக்கும் என்றுதான் அனைவரும் காத்திருக்கின்றனர். தற்போது சின்னத்திரை சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகளின் ஷூட்டிங் 20 நபர்களை கொண்டு நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால் சினிமா ஷூட்டிக்கிற்கு அதிக நபர்கள் தேவை படுவார்கள் என்பதால் அதனை அரசு இன்னும் அனுமதிக்கவில்லை.

கொரோனா லாக்டவுன் முடிந்தாலும் சினிமா துறை ஷூட்டிங் நடத்துவதில் பல்வேறு சிக்கல்கள் வரலாம். இது பற்றி பேசியுள்ள பிரபல நடிகை லாவண்யா திரிபாதி, தான் இனி நெருக்கமான intimate காட்சிகளில் முடிந்தவரை நடிக்க மாட்டேன் என கூறியுள்ளார். அதற்கான முயற்சிகளை செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளார் அவர்.

பாதுகாப்புக்காக ஷூட்டிங் ஸ்பாட்டில் செய்ய வேண்டிய விஷயங்கள் பற்றி பேசிய லாவண்யா, "ஷூட்டிங் நடக்கும் செட்டில் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட வேண்டும். நான் மற்றும் என்னுடைய staff அனைவரும் பாதுகாப்பாக இருப்பதற்காக நான் எதையும் செய்ய தயாராக இருக்கிறேன்."

"முன்பு இருந்தது போல இல்லாமல் கொரோனா லாக்டவுன் பிறகு நடக்கும் ஷூட்டிங் அப்படியே வித்யாசமாக இருக்கும். ஆனாலும் அரசு சொல்லும் வழிமுறைகளை நாம் பின்பற்ற வேண்டும்" என லாவண்யா கூறியுள்ளார்.

சசிகுமார் நடித்த பிரம்மன் படத்தில் அவரது ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் லாவண்யா திரிபாதி. அதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்பு 2012ல் எஸ். எஸ். ராஜமௌலி தயாரித்த அண்தால ராக்ஷசி படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகம் ஆனார்.

பிரம்மன் படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் எந்த படத்திலும் நடிக்காமல் இருந்தார் லாவண்யா. அதன் பிறகு 2017ல் மாயவன் என்ற படத்தில் நடித்து இருந்தார்.

அதன் பிறகு தற்போது தனது மூன்றாவது தமிழ் படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ளார் லாவண்யா. அவர் அதர்வா ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். அறிமுக இயக்குனர் ரவீந்திர மாதவா இதனை இயக்குகிறார். இந்த படத்தில் அதர்வா போலீஸ் கான்ஸ்டபிளாக நடிக்க, லாவண்யா IAS தேர்வுக்காக தயாராகி வரும் பெண்ணாக நடிக்கவுள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் சென்னையில் துவங்கி நடைபெற்று வந்தது. கொரோனா லாக் டவுனால் அது இப்போது நிறுத்தப்பட்டு உள்ளது.

கொரோனா லாக் டவுன் துவங்கும் முன்பு லாவண்யா ஏ1 எக்ஸ்பிரஸ் என்ற தெலுங்கு படத்திலும் நடித்து வந்தார். அதில் சந்தீப் கிஷன் தான் ஹீரோ. இதில் ஹாக்கி வீராங்கனையாக லாவண்யா நடிக்கிறார்.

இந்த படம் மட்டுமின்றி தெலுங்கில் வேறு சில படங்களும் கைவசம் வைத்திருக்கிறார் லாவண்யா. Chaavu Kaburu Challaga என்ற காமெடி படத்திலும் அவர் அடுத்து நடிக்கவுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்