ஆப்நகரம்

ஊர்வசியிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன்: ஜோதிகா!

‘மகளிர் மட்டும்’ படத்தில் நடித்த போது நடிகை ஊர்வசியிடம் இருந்து நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன் என்று நடிகை ஜோதிகா கூறியுள்ளார்.

TNN 16 Sep 2017, 8:13 am
சென்னை: ‘மகளிர் மட்டும்’ படத்தில் நடித்த போது நடிகை ஊர்வசியிடம் இருந்து நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன் என்று நடிகை ஜோதிகா கூறியுள்ளார்.
Samayam Tamil learnt more from urvashi says jyothika
ஊர்வசியிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன்: ஜோதிகா!


நீண்ட இடைவெளிக்கு பின், ஜோதிகா நடிப்பில் உருவான, படம் ‘மகளிர் மட்டும்’. இந்தப் படம் நேற்று வெளியானது. ஜோதிகாவை யார் சந்தித்தாலும், ‘மகளிர் மட்டும்’ பட அனுபவங்களை பற்றியே பேசுகிறார்.

இந்தப் பட அனுபவம் குறித்து ஜோதிகா கூறுகையில், ‘‘இதற்கு முன், பல படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறேன்.

ஆனால் இந்த ‘மகளிர் மட்டும்’ படத்தில், நடிகைகள் பானுப்ரியா, ஊர்வசி, சரண்யா போன்ற ஜாம்பவான்களுடன் நடிக்க முதலில் கொஞ்சம் பயம் இருந்தது.

அவர்களுடன் சேர்ந்து நடிக்கும் காட்சிகளில், சற்று தயங்கினேன். ஆனால், மூன்று பேருமே, எனக்கு வசனம் உள்ளிட்ட விஷயங்களை சொல்லிக் கொடுத்தார்கள்.

இதனால் பயமில்லாமல் என்னால் நடிக்க முடிந்தது. குறிப்பாக, நடிகை ஊர்வசியிடமிருந்து நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன். இந்த படத்துக்காக, முதல் முறையாக, ‘புல்லட்’ ஓட்டினேன்’’ என்றார்.

Learnt more from Urvashi says Jyothika.

அடுத்த செய்தி

டிரெண்டிங்