ஆப்நகரம்

விளக்கேற்ற சொன்ன மோடி, அவரே எதிர்பார்க்காததை செய்த கஸ்தூரி

பிரதமர் மோடி கேட்டுக் கொண்டதன்படி தமிழ் திரையுலக பிரபலங்கள் பலரும் வீட்டு வாசல் அல்லது பால்கனியில் விளக்கேற்றி வைத்தனர். அதில் நடிகை கஸ்தூரி செய்த காரியம் தான் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Samayam Tamil 6 Apr 2020, 8:43 am
பிரதமர் மோடி கேட்டுக் கொண்டதன்படி தமிழ் திரையுலக பிரபலங்கள் பலரும் வீட்டு வாசல் அல்லது பால்கனியில் விளக்கேற்றி வைத்தனர். அதில் நடிகை கஸ்தூரி செய்த காரியம் தான் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
Samayam Tamil lighting diyas kasthuri does the ultimate
விளக்கேற்ற சொன்ன மோடி, அவரே எதிர்பார்க்காததை செய்த கஸ்தூரி


ரஜினி

கொரோனா இருளை அகற்ற ஏப்ரல் மாதம் 5ம் தேதி இரவு 9 மணி முதல் 9 நிமிடங்கள் அனைவரும் தங்கள் வீட்டு வாசல் அல்லது பால்கனியில் விளக்கேற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை விடுத்தார். அவரின் கோரிக்கையை ஏற்று பொது மக்களும், திரையுலக பிரபலங்களும் விளக்கேற்றினார்கள். ரஜினிகாந்த் தனது மனைவியுடன் சேர்ந்து மெழுகுவர்த்தி ஏற்றி அதை புகைப்படம் எடுத்து ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

Twitter-Rajinikanth

ராகவா லாரன்ஸ்

நடிகரும், இயக்குநரும், டான்ஸ் மாஸ்டருமான ராகவா லாரன்ஸோ மோடி சொன்னதை அப்படியே செய்துள்ளார். விளக்கு அல்லது டார்ச்லைட் அல்லது செல்போன் டார்ச் என்று மோடி கூறியபடி மூன்றையுமே ஒளிரச் செய்திருக்கிறார் ராகவா லாரன்ஸ்.

Twitter-Raghava Lawrence

கஸ்தூரி

உங்களுக்கு என்ன விளக்கு தானே ஏத்தணும் என்று மெழுகுவர்த்தி, டார்ச்லைட், செல்போன் டார்ச் படங்களை ட்விட்டரில் போஸ்ட் செய்து ஏத்திட்டேன் என்று ட்வீட் செய்துள்ளார் நடிகை கஸ்தூரி. அவரின் ட்வீட்டை பார்த்த ரசிகர்கள் இது தான் அல்டிமேட் அக்கா என்று தெரிவித்துள்ளனர்.

Twitter-Kasturi Shankar

சி.எஸ். அமுதன்

தமிழ் படம் புகழ் இயக்குநர் சி.எஸ். அமுதன் விளக்கு எல்லாம் ஏற்றவில்லை. கொரோனாவின் ஆத்மா சாந்தியடையட்டும் என்று மட்டும் ட்வீட் செய்துள்ளார்.

Twitter-CS Amudhan

அடுத்த செய்தி

டிரெண்டிங்