ஆப்நகரம்

இந்தியா சார்பில் ஆஸ்கருக்கு போகும் ஜல்லிக்கட்டு

இந்தியா சார்பில் சிறந்த வெளிநாட்டு படத்திற்கான ஆஸ்கர் விருதுக்கு ஜல்லிக்கட்டு மலையாளப் படம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

Samayam Tamil 25 Nov 2020, 5:20 pm
ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் ஜல்லிக்கட்டு படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கிய மலையாள படமான ஜல்லிக்கட்டை இயக்குநர் ராகுல் ரவைல் தலைமையிலான ஃபிலிம் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா பரிந்துரை செய்துள்ளது.
Samayam Tamil jallikattu


கட்டுக்கடங்காத ஒரு காளை கிராமத்திற்குள் புகுந்த நாள் பற்றிய கதை தான் ஜல்லிக்கட்டு. ஷிகாரா, தீபிகா படுகோனின் சாபக், குஞ்சன் சக்சேனா-தி கார்கில் கேர்ள், சகுந்தலா தேவி, சலாங்க், குலாபோ சிதாபோ உள்ளிட்ட 26 படங்களை தோற்கடித்து ஆஸ்கருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது ஜல்லிக்கட்டு.

14 பேர் அடங்கிய ஜூரியில் பெரும்பாலானோர் ஜல்லிக்கட்டு படத்தை தான் பரிந்துரை செய்ததாக தலைவர் ரவைல் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பிரச்சனையால் ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்படும் படத்தை ஆன்லைன் மூலம் தேர்வு செய்துள்ளனர்.

அதாவது 14 நடுவர்களும் கடந்த ஒரு வாரமாக தினமும் 4 முதல் 5 படங்களை பார்த்துள்ளனர். இம்முறை நேரடியாக ஓடிடியில் வெளியான படங்களையும் கணக்கில் எடுத்துள்ளனர்.

கடந்த ஆண்டு அபர்ணா சென் தலைமையிலான நடுவர்கள் ஜோயா அக்தர் இயக்கிய கல்லி பாய் படத்தை இந்தியா சார்பில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்தார்கள். ஆனால் அந்த படத்திற்கு விருது எதுவும் கிடைக்கவில்லை. தென் கொரிய படமான பாரசைட் ஆஸ்கர் விருது வாங்கி புது சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்கர் விருது விழா வழக்கமாக பிப்ரவரி மாதம் கடைசி வாரம் நடத்தப்படும். ஆனால் கொரோனா வைரஸ் பிரச்சனையால் 2021ம் ஆண்டுக்கான விழா பிப்ரவரி அல்லாமல் ஏப்ரல் மாதம் 25ம் தேதி நடத்தப்பட உள்ளது.

அப்பாவின் ஃபிட்னஸ் கோச்சை காதலிக்கும் பிரபல நடிகரின் மகள்

அடுத்த செய்தி

டிரெண்டிங்