நேற்றைய தினம் அமோகமாக நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அரசியல் கட்சி தலைவர்களும், சினிமா பிரபலங்களும் ஆர்வமாக வாக்களித்தனர். பெரிதான அளவில் அசம்பாவிதம் எதுவும் அரங்கேறாமல் அமைதியாக நடந்து முடிந்துள்ளது தமிழக சட்டசபை தேர்தல். தமிழ் சினிமாவின் முன்னணி பிரபலங்கள் பலர் ஆர்வமாக வாக்களித்து, மக்களையும் வாக்களிக்க கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தி இருந்தாலும், திரைத்துறையை சார்ந்த பிரபலங்கள் பலர் வாக்களிக்கவில்லை. காலையிலே தனது மனைவி ஷாலினியுடன் வாக்குச்சாவடி மைய்யத்திற்கு நடிகர் அஜித் வாக்களித்து சென்றார். அவர் அணிந்து வந்த கருப்பு, சிவப்பு மாஸ்க்கும் பல விவாதங்களை கிளப்பியது. அதே போல் நடிகர் விஜய் வாக்குச்சாவடி மையத்திற்கு சைக்கிளில் வந்து பரபரப்பினை கிளப்பினார். வீடு அருகில் இருப்பதால் வாக்குச்சாவடி மையத்திற்கு சைக்களில் வந்ததாக அவர் கூறினாலும், தினமும் விண்ணை மூட்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறிப்பிடும் விதமாகவே, விஜய் சைக்கிளில் வந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டது.
நடிகர் ரஜினி, கமல், சூர்யா, சிம்பு, அருண்விஜய், விஷ்ணு விஷால், சூரி, சந்தானம் உள்ளிட்ட சினிமா பிரபலங்களும் தங்களின் ஜனநாயக கடமையை தவறாமல் நிறைவேற்றினர். இந்நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், இசைஞானி இளையராஜா, யுவன், மணிரத்னம், வெற்றிமாறன், கவுண்டமணி, வடிவேலு, கே.பாக்யராஜ், மோகன், கார்த்திக், பார்த்திபன், ராஜ்கிரண், அரவிந்த் சுவாமி, பிரபுதேவா, லாரன்ஸ், உள்ளிட்ட திரையுலக நட்சத்திரங்கள் பலர் வாக்களிக்க வரவில்லை.
இயக்குனர் பார்த்திபன் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதால், அவருக்கு அலர்ஜி ஏற்பட்டுள்ளதாக சமூக வலைதளப் பக்கங்களில் தெரிவித்திருந்தார். இதனால் அவரும் நேற்று வாக்களிக்க வரவில்லை. அதே போல், சுந்தர்.சி, சிவா, சமுத்திரக்கனி, ஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன்,லிங்குசாமி, கோவை சரளா, மீனா, விக்னேஷ் சிவன் உள்ளிட்ட சினிமா பிரபலங்களும் வாக்களிக்கவில்லை. நடிகர் தனுஷும், அவரின் மனைவி சௌந்தர்யா ரஜினிகாந்த்யும் தி கிரே மேன் படைப்பிற்காக அமெரிக்காவில் இருப்பதால், அவர்களும் நேற்று நடந்த சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்கவில்லை.
அதே போல் தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்றைய தினம் மாலையளவில் வந்து வாக்களிப்பார் என அவர் குடும்பத்தினர் பேட்டியளித்தனர். அமமக உடன் அவர் கூட்டணி வைத்திருப்பதால் நிச்சயமாக வருவார் என அவரின் தொண்டர்களும், ரசிகர்களும் ஆர்வமாக காத்திருந்தனர். ஆனால் அவரும் கடைசி வரை வாக்களிக்க வரவில்லை.
நடிகர் ரஜினி, கமல், சூர்யா, சிம்பு, அருண்விஜய், விஷ்ணு விஷால், சூரி, சந்தானம் உள்ளிட்ட சினிமா பிரபலங்களும் தங்களின் ஜனநாயக கடமையை தவறாமல் நிறைவேற்றினர். இந்நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், இசைஞானி இளையராஜா, யுவன், மணிரத்னம், வெற்றிமாறன், கவுண்டமணி, வடிவேலு, கே.பாக்யராஜ், மோகன், கார்த்திக், பார்த்திபன், ராஜ்கிரண், அரவிந்த் சுவாமி, பிரபுதேவா, லாரன்ஸ், உள்ளிட்ட திரையுலக நட்சத்திரங்கள் பலர் வாக்களிக்க வரவில்லை.
இயக்குனர் பார்த்திபன் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதால், அவருக்கு அலர்ஜி ஏற்பட்டுள்ளதாக சமூக வலைதளப் பக்கங்களில் தெரிவித்திருந்தார். இதனால் அவரும் நேற்று வாக்களிக்க வரவில்லை. அதே போல், சுந்தர்.சி, சிவா, சமுத்திரக்கனி, ஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன்,லிங்குசாமி, கோவை சரளா, மீனா, விக்னேஷ் சிவன் உள்ளிட்ட சினிமா பிரபலங்களும் வாக்களிக்கவில்லை. நடிகர் தனுஷும், அவரின் மனைவி சௌந்தர்யா ரஜினிகாந்த்யும் தி கிரே மேன் படைப்பிற்காக அமெரிக்காவில் இருப்பதால், அவர்களும் நேற்று நடந்த சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்கவில்லை.
அதே போல் தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்றைய தினம் மாலையளவில் வந்து வாக்களிப்பார் என அவர் குடும்பத்தினர் பேட்டியளித்தனர். அமமக உடன் அவர் கூட்டணி வைத்திருப்பதால் நிச்சயமாக வருவார் என அவரின் தொண்டர்களும், ரசிகர்களும் ஆர்வமாக காத்திருந்தனர். ஆனால் அவரும் கடைசி வரை வாக்களிக்க வரவில்லை.