ஆப்நகரம்

கைதில செத்தவரு விக்ரம்ல எப்படிப்பா வந்தாரு: லோகேஷ் சொன்ன வேற லேவல் தகவல்.!

கமலின் ‘விக்ரம்’ படம் குறித்து ரசிகர்களின் பல கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

Samayam Tamil 9 Jun 2022, 8:08 am
கமல் தயாரித்து நடித்துள்ள ‘விக்ரம்’ படம் வெளியாகி ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. ரசிகர்களின் மிக நீண்ட எதிர்பார்ப்பிற்கு பின் வெளியாகியுள்ள இந்தப்படம் வசூலிலும் மிகப்பெரிய சாதனையை படைத்து வருகிறது.
Samayam Tamil Kamal - Lokesh
Kamal - Lokesh


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது ‘விக்ரம்’ படம். கமல், சூர்யா, விஜய் சேதுபதி, பகத் பாசில் என மிகப்பெரிய மாஸ் கூட்டணியில் வெளியான இந்தப்படம் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பி வருகிறது. பரபரப்பான திரைக்கதை அமைப்பினாலும், ஆக்ஷன் காட்சிகளினாலும் அனைத்து தரப்பு ரசிக்ரகளையும் கவர்ந்து வருகிறது.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

மேலும்‘விக்ரம்’ படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகிய முதல் நாளிலே உலகம் முழுவதும் 40 கோடி ரூபாய் வசூல் செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது. உலகம் முழுவதும் 200 கோடி ரூபாய் வசூலை நோக்கி ‘விக்ரம்’ படம் சென்று கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியால் லோகேஷ் கனகராஜுக்கு கார் ஒன்றை பரிசாக அளித்துள்ளார் கமல்.

இந்நிலையில் நேற்றைய தினம் ‘விக்ரம்’ படம் குறித்த டிவிட்டர் லைவ் கேள்வி பதிலுக்கு லோகேஷ் கனகராஜ் ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்தார். ரசிகர் ஒருவர், அப்போது ரசிகர் ஒருவர் "கைதியில் இறந்த அர்ஜுன் தாஸ் கதாப்பாத்திரம் எப்படி விக்ரம் படத்தில் உயிருடன் வந்தது ? இதை நம்ப முடியவில்லை" என கேட்டிருந்தார்.

அடடே.. நயன் – விக்கி திருமணத்திற்கு கிளம்பிய சூப்பர் ஸ்டார்: சூப்பர் ஜி .!

அதற்கு பதிலளித்த லோகேஷ், "கைதியில் நெப்போலியனால் அன்புவின் தாடை மட்டும் உடைந்தது, அதனால் விக்ரமில் அந்த இடத்தில் தையல் குறி இருக்கும். இது குறித்து கைதி 2ல் மேலும் விளக்கப்படும்" என லோகேஷ் கூறினார். இதே போல் ரசிகர்களின் மேலும் பல கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார் லோகேஷ் கனகராஜ்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்