ஆப்நகரம்

நெய்வேலியில் விஜய்! வந்ததும் விஜய் சேதுபதியுடன் மோதல்!

ரெய்டு விவகாரங்கள் முடிந்ததையடுத்து விஜய் நெய்வேலிக்கு விரைந்தார். தற்போது மாஸ்டர் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார்.

Samayam Tamil 7 Feb 2020, 12:28 pm
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் விஜய் நடித்துக் கொண்டிருந்தபோது வருமான வரித்துறையினர் வந்ததும், படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதும் பெரும்பாலானோர் அறிந்த செய்திதான். ஆனா விஜய் இல்லாவிட்டால் என்ன நான் வண்டியை இந்த பக்கம் திருப்பிக்குறேன்னு புதிய ரூட் போட்டுவிட்டார் லோகேஷ் கனகராஜ் . ஆம். விஜய் இல்லாமலே ஷூட்டிங்கை தொடங்கிவிட்டாராம்.
Samayam Tamil lokesh kanagaraj


விஜய் - விஜய்சேதுபதி சண்டைக் காட்சிகளை மாஸ்டர் குழுவினர் நெய்வேலியில் படம்பிடித்தனர். அப்போதுதான் விஜய்யை வருமானத்துறை அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்துள்ளனர். இதனால் அன்றைய தினம் படப்பிடிப்பு நிறுத்திக் கொள்ளப்பட்டதாம்.

அஜித் கதாபாத்திரத்தில் நடிக்கப்போகும் பாலிவுட் ஹீரோ இவரா?

தயாரிப்பாளர் பணத்தை மிச்சம் பிடிப்பதில் வல்லவரான லோகேஷ், இதை எப்படி சமாளிக்கப் போகிறார், விஜய் இல்லாமல் ஷூட்டிங் நடத்தப்போகிறாரா என்று சிலர் விளையாட்டாக கூறி வந்தனர். ஆனால் உண்மையிலேயே படப்பிடிப்பை மறுநாளே துவக்கி அவர்களை வியப்படைய செய்துவிட்டார் லோகேஷ்.
ஆண்ட்ரியாவின் காட்சிகளும், விஜய் சேதுபதியின் சில காட்சிகளும் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

நெய்வேலியில் விஜய்

இந்நிலையில் விஜய் இன்று படப்பிடிப்பில் இணைந்து கொண்டார். இரண்டு நாட்களுக்கு பிறகு படப்பிடிப்பில், விஜய் இணைந்துள்ளதால், ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். மாஸ்டர் படத்தில் ஆண்ட்ரியா, சாந்தனு, மாளவிகா மோகனன், அர்ஜூன் தாஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்நிலையில், பாதியில் நிறுத்தப்பட்ட விஜய் - விஜய் சேதுபதி சண்டைக் காட்சிகள் தொடர்ந்து எடுக்கப்படும் எனத் தெரிகிறது.

உண்மை உண்மையா வெளிவருதே: விஜய்யை கிண்டல் செய்த ஹெச். ராஜா

அடுத்த செய்தி

டிரெண்டிங்