ஆப்நகரம்

கொரோனாவால் நின்ற மாஸ்டர்: லோகேஷ் கனகராஜ் எடுத்துள்ள அதிரடி முடிவு?

மாஸ்டர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், தற்போது தனது அடுத்த படத்தின் பணிகளை துவங்க்கியுள்ளார் என கூறப்படுகிறது.

Samayam Tamil 11 Apr 2020, 6:19 pm
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் படத்தின் ஷூட்டிங்கை முடித்துவிட்டு இறுதி கட்ட பணிகளில் பிஸியாக இருந்தார். ஏப்ரல் 9ம் தேதி இந்த படம் வெளியாகி இருக்க வேண்டும்.
Samayam Tamil lokesh kanagaraj


விஜய் ரசிகர்கள் அனைவரும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக அது தள்ளிப்போனது.

கொரோனா பிரச்சனை முடிந்து நிலைமை சீரான பிறகு தான் மாஸ்டர் படம் வெளியாகும் என கூறப்படுகிறது. அதனால் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதம் தான் அது வெளிவரும் என கூறுகின்றனர். அதிகாரபூர்வ தேதி படக்குழு அறிவித்தால் தான் உறுதியாகும்.

இந்நிலையில் தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக கிடைத்துள்ள நேரத்தை வீணடிக்காமல் லோகேஷ் கனகராஜ் தனது அடுத்த படத்தின் ஸ்கிரிப் பணிகளை துவங்கிவிட்டார் என கூறப்படுகிறது.

கமல்ஹாசன் தயாரிக்கவுள்ளதாக கூறப்படும் இந்த படத்தில் ரஜினி தான் ஹீரோ என்றும் உறுதிப்படுத்தப்படாத தகவல் கடந்த பல மாதங்களுக்கு முன்பே வெளிவந்தது. லோகேஷ் கனகராஜ் கமல்ஹாசனின் தீவிர ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த படம் பற்றிய அறிவிப்பு விரைவில் எதிர்பார்க்கலாம்.

லோகேஷ் கனகராஜுக்கு மாஸ்டர் மூன்றாவது படம். மாநகரம், கைதி ஆகிய இரண்டு படங்கலும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றன. அதனால் மாஸ்டர் படத்திற்கும் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் உட்பட மாஸ்டர் படத்தில் பலர் நடித்துள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்