ஆப்நகரம்

மீண்டும் ஒரு பாடலாசிரியர் நடிகராக களத்தில் இறங்குகிறார்!

பாடலாசிரியர்கள் பா.விஜய், சினேகனைத் தொடர்ந்து பாடலாசிரியர் ஜெயம்கொண்டானும் நடிப்புக் களத்தில் இறங்குகிறார்.

TOI Contributor 16 Jan 2017, 5:57 pm
பாடலாசிரியர்கள் பா.விஜய், சினேகனைத் தொடர்ந்து பாடலாசிரியர் ஜெயம்கொண்டானும் நடிப்புக் களத்தில் இறங்குகிறார்.
Samayam Tamil lyric writer jayamkondan acts in film
மீண்டும் ஒரு பாடலாசிரியர் நடிகராக களத்தில் இறங்குகிறார்!


பாடலாசிரியர்கள் பா.விஜய், சினேகன் படங்களில் ஹீரோவாக நடித்து வரும் நிலையில் தற்போது பாடலாசிரியர் ஜெயம்கொண்டானும் சில படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். ஏற்கனவே ரத்னசிவா இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான றெக்க படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் நடித்துள்ளார். தற்போது பன்னீர் செல்வம், பொன்ராம், விஜயசந்தர், ராஜா ஆகியோர் இயக்கும் படங்களில் நடிக்கவுள்ளார்.

இதுகுறித்து ஜெயம்கொண்டான் கூறுகையில், ‘‘தற்போது நான் வெயிட்டான கேரக்டரில் நடிக்கவில்லை, ஹீரோவக்கு நண்பன், அல்லது நான்கு பேரில் ஒருவராகத்தான் நடிக்கிறேன். இப்படி நடித்து நடிப்பில் என் கேரக்டரை உயர்த்திய பிறகு வெயிட்டான ரோல்களில் நடிப்பேன். இந்த ஆண்டில் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க முயற்சித்து வருகிறேன். படத்தில் என்னுடன் கஞ்சா கருப்புவும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அந்த படத்தை ஒரு முன்னணி இயக்குனர் இயக்க உள்ளார்’’ என்றார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்