ஆப்நகரம்

800க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதிய பாடலாசிரியர் முத்து விஜயன் காலமானார்!

தமிழ் சினிமாவில் 800க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதிய பாடலாசிரியர் முத்துவிஜயன் இன்று மாலை 4 மணிக்கு காலமானார்.

Samayam Tamil 6 Sep 2019, 9:34 pm
தமிழ்த் திரையுலகில் முன்னணி கதாநாயகர்கள் முதல் பலருக்கும் இதுவரை 800க்கும் அதிகமான பாடல்களை எழுதியுள்ள பிரபல பாடலாசிரியர் முத்துவிஜயன் மரணம். கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா...’, ‘மேகமாய் வந்துபோகிறேன்...’ உள்ளிட்ட காதல் பாடல்கள் மூலம் கவனம் ஈர்த்த கவிஞர், முத்துவிஜயன். பாடலாசிரியர், வசனகர்த்தா, உதவி இயக்குனர் என பன்முகம் கொண்டவர்.
Samayam Tamil Muthu Vijayan Died


மஞ்சல் காமாலை நோயினால் கல்லீரல் பாதிக்கப்பட்ட முத்துவிஜயன் இன்று மாலை 4 மணிக்கு காலமானார். சென்னை வளசரவாக்கம் மின் மயானத்தில் உடல் தகனம் நடைபெற்றது. கவிஞர் தேன்மொழியை காதல் திருமணம் செய்து, பிறகு விவாகரத்து பெற்ற முத்து விஜயன் சமீபகாலமாக தழிழ் திரைப்பட பாடலாசிரியர்கள் சங்கத்தில் தங்கியிருந்தார்.

Champion: மீண்டும் ஸ்போர்ட்ஸ் படத்துடன் சுசீந்திரன்!

Sai Dheena: அனாதையாக இருந்த எங்களுக்கு வாழ்வு கொடுத்தார் விஜய்: வில்லன் நடிகர்!

கால்பந்தை மையப்படுத்திய சாம்பியன் படத்தின் டீசர்!

அடுத்த செய்தி

டிரெண்டிங்