ஆப்நகரம்

17 பேரில் ஒருவனுக்கு கூடவா மனசாட்சி இல்லை; வைரமுத்து வேதனை!

பெண் குழந்தை பாலியல் விவகாரத்தில் கவிஞர் வைரமுத்து மிகவும் வேதனையான பதிவை இட்டுள்ளார்.

Samayam Tamil 22 Jul 2018, 11:03 am
சென்னை: பெண் குழந்தை பாலியல் விவகாரத்தில் கவிஞர் வைரமுத்து மிகவும் வேதனையான பதிவை இட்டுள்ளார்.
Samayam Tamil chennai-11years-girl-raped-by-18-men


சென்னை அயனாவரத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 11 வயது சிறுமி 17 பேரில் சீரழிக்கப்பட்டார். இந்த சிறுமி காது கேட்காத, வாய் பேச முடியாத என்பது வேதனையான ஒன்று. முதலில் லிப்ட் ஆபரேட்டர் ரவி(66) சிறுமியிடம் கொடூரச் செயலில் ஈடுபட்டுள்ளான்.

இதையடுத்து மயக்க மருந்து கொடுத்து, 16 பேர் வன்கொடுமை செய்ய உதவி செய்துள்ளான். நாட்டையே பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. கோபம் தாங்க முடியாமல், நீதிமன்ற வளாகத்திலேயே 17 பேரையும் வழக்கறிஞர்கள் அடித்து துவம்சம் செய்தனர்.

இவர்களுக்கு ஆதரவாக வாதாட யாரும் முன்வரப் போவதில்லை என்று வழக்கறிஞர்கள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இந்நிலையில் கவிஞர் வைரமுத்து, சிறுமிக்கு நேர்ந்த கொடுமை குறித்து டுவிட்டரில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில், ஒரு சிறுமிக்கு பாதுகாப்பு இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. அது இருக்கட்டும். அந்த 17 பேரில் ஒருவனுக்குக் கூடவா மனசாட்சி இல்லை. இது ஒரு தேசிய சோகம் அல்லவா? என்று வைரமுத்து குறிப்பிட்டுள்ளார்.

Lyricist Vairamuthu condemns the Chennai girl rape issue.

அடுத்த செய்தி

டிரெண்டிங்