ஆப்நகரம்

மெர்சலை அடுத்து சர்கார் படத்திலும் பாடல் எழுதிய விவேக்!

விஜய்யின் ‘சர்கார்’ படத்தின் அனைத்துப் பாடல்களையும் பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார்.

Samayam Tamil 26 Jul 2018, 12:32 am
விஜய்யின் ‘சர்கார்’ படத்தின் அனைத்துப் பாடல்களையும் பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார்.
Samayam Tamil vivek sarkar1


கத்தி, துப்பாக்கி ஆகிய படங்களைத் தொடர்ந்து தளபதி விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் சர்கார் படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் விஜய் பிறந்தநாளை (ஜூன் 22) முன்னிட்டு கடந்த மாதம் 21ம் தேதி வெளியானது.

இந்நிலையில், மெர்சலை படத்தை தொடர்ந்து, சர்கார் படத்தில் அனைத்து பாடல்களையும் பாடலாசிரியர் விவேக் தான் எழுதியுள்ளார். மெர்சல் திரைப்படத்தில் ஆளப்போறான் தமிழன் பாடலை இவர் தான் எழுதியுள்ளார். மேலும், நீ தானே, மெர்சல் அரசன், மேக்சோ ஆகிய இவர் எழுதிய பாடல்களும் ஹிட் ஆனது.



தற்போது விஜய், ரகுமான், விவேக் கூட்டணியில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் சர்கார் படத்தின் அனைத்துப் பாடல்களும் எழுதியிருப்பது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட விவேக், ரகுமான் இசையில் மீண்டும் பாடல் எழுதுவதற்கு பெருமையாக உள்ளதாகவும், ஏஆர் முருகதாஸ், சன் பிக்சர்ஸ், விஜய் அனைவருக்கும் நன்றி என்றும் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்