ஆப்நகரம்

இனி விபத்து நடந்தால்... அதிரடி முடிவெடுத்த மாநாடு படக்குழு!

சிம்பு நடித்துவரும் மாநாடு திரைப்படத்தில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களுக்கு காப்பீடு செய்து மாநாடு படக்குழு பாராட்டுகளை அள்ளியுள்ளது.

Samayam Tamil 25 Feb 2020, 1:31 pm
மாநாடு படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் விபத்து காப்பீடு எடுத்து, பலரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.
Samayam Tamil maanaadu


கமல்ஹாசன் நடித்துவரும் இந்தியன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில், உதவி இயக்குனர் உள்ளிட்ட 3 பேர் உயிரிழந்தனர். நடிகர் கமல்ஹாசன், நடிகை காஜல் அகர்வால், இயக்குநர் ஷங்கர் உள்ளிட்டோரும் விபத்தின் போது சம்பவ இடத்திலேயே இருந்துள்ளனர். இந்த விசயம் அவர்களை மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும், தமிழ் மக்களையும் கூட அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர்களுக்கு இருக்கும் பாதுகாப்பு, அன்றாடம் வேலை செய்யும் சினிமா தொழிலாளர்களுக்கு இல்லையா என கோலிவுட் பிரபலங்கள் சிலர் உட்பட மக்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். விபத்து நடக்காமல் பாதுகாப்பு ஏற்படுத்தவும், விபத்துக்கு காப்பீடு ஏற்பாடு செய்யவும் பல யோசனைகளையும் கூறி வந்தனர். இந்நிலையில்தான் சிம்பு நடிக்கும் மாநாடு படத்தின் தயாரிப்பாளர் இப்படி ஒரு முயற்சியை மேற்கொண்டுள்ளார்.

சுரேஷ் காமாட்சி, தனது படத்தில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களுக்கும் 30 கோடி ரூபாய் அளவுக்கு காப்பீடு எடுத்துள்ளார். இதன் ப்ரீமியம் தொகையான 7.8 லட்ச ரூபாயையும் செலுத்திவிட்டாராம். இதனை அறிந்த படக்குழுவினரும், கோலிவுட் வட்டாரத்தினரும் சுரேஷ் காமாட்சியை பாராட்டி வருகின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்