ஆப்நகரம்

நக்சலைட்டாக மாறிய நடிகை சாய் பல்லவி!

நடிகை சாய் பல்லவி, ஒரு தெலுங்கு படத்தில் நக்சலைட்டாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

Samayam Tamil 19 Dec 2018, 2:56 pm
நடிகை சாய் பல்லவி, ஒரு தெலுங்கு படத்தில் நக்சலைட்டாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
Samayam Tamil sai


நடிகை சாய் பல்லவி, ‘பிரேமம் என்ற மலையாளப் படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதையடுத்து தமிழில் ‘கரு என்ற படத்தில் நடித்தார். பின்னர் அவர் தெலுங்கில் பல படங்களில் நடித்து வருகிறார். அதிக வாய்ப்புகள் வந்தாலும் எல்லா படங்களையும் ஒப்புக் கொள்வதில்லை. அதில் தரமான படங்களாக பார்த்து தேர்ந்தெடுத்து நடித்த வருகிறார். அவர் பல பட வாய்ப்புகளை நிராகரிப்பதால் அவர் மீது பல இயக்குனர்கள் கோபத்தில் உள்ளனர்.

தற்போது தனுஷுக்கு ஜோடியாக ‘மாரி 2’ படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை பாலாஜி மோகன் இயக்கியுள்ளார்.இந்தப் படத்தில் ஆட்டோ டிரைவராக நடித்துள்ளார். மேலும் இவர் தெலுங்ககில் வேணு உடுகலா இயக்கத்தில் ராணா ஹீரோவாக நடிக்கும் ‘விரத பாவம் 199‘’ என்ற படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தில் ராணா போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். சாய் பல்லவி ஒரு நக்சலைட்டாக நடிக்க உள்ளார்.

இந்த படம் ஒரு காதல் படமாம். காதல் காட்சிகள் தூக்கலாக இருந்தாலும் ஆக்ஷனுக்கு குறைவே இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் படப்பிடிப்பு துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரேமம் படத்தை அடுத்து சாய் பல்லவி தெலுங்கு படங்களில் தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்