தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் மாதவன். இவர் தமிழ் படங்கள் மட்டுமின்றி ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் சினிமாவிலும் நடித்து வருகிறார். இவர் இயக்கி நடித்த 'ராக்கெட்ரி' படம் அண்மையில் வெளியானது.
இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு மாதவன் இயக்கியிருந்த படம் 'ராக்கெட்ரி தி நம்பி விளைவு'. மாதவன் இப்படத்தை இயக்கியதோடு மட்டுமல்லாமல், நம்பி நாராயணனாக அவரே நடித்திருந்தார். இந்தப் படத்தின் மூலம் இயக்குநராகவும் அறிமுகமானார் மாதவன்.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
தமிழ், கன்னடம், தெலுங்கு, ஆங்கிலம், இந்தி மொழிகளில் ஜூன் 1ம் தேதி இப்படம் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இதனிடையே, 'ராக்கெட்ரி' படம் விமர்சனரீதியாக வரவேற்பை பெற்றாலும், பெரிதாக வசூல் புரியவில்லை என்ற தகவல் வெளியானது. மேலும் இந்தப்படத்தை எடுப்பதற்காக மாதவன் தனது வீட்டை விற்றதாகவும் தகவல்கள் வெளியாகின.
லோகேஷுக்காக விஜய் எடுக்க போகும் மெஹா ரிஸ்க்: வெளியான மரண மாஸ் தகவல்.!
இந்நிலையில் இதனை மறுத்துள்ள மாதவன், "தயவு செய்து யாரும் என் தியாகத்தை அதிகமாக ஆதரிக்காதீர்கள். நான் எனது வீடு உள்ளிட்ட எதையும் இழக்கவில்லை. உண்மையில் ராக்கெட்ரி படத்தில் பணிபுரிந்தவர்கள் அனைவரும் மிகவும் பெருமையுடன் இந்த ஆண்டு அதிக வருமான வரி செலுத்துவார்கள். கடவுளின் அருளால் இந்தப் படத்தால் அனைவரும் நல்ல லாபம் ஈட்டினோம். நான் இன்னும் என் வீட்டில் தான் வாழ்கிறேன்" என்று விளக்கம் அளித்துள்ளார்.
இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு மாதவன் இயக்கியிருந்த படம் 'ராக்கெட்ரி தி நம்பி விளைவு'. மாதவன் இப்படத்தை இயக்கியதோடு மட்டுமல்லாமல், நம்பி நாராயணனாக அவரே நடித்திருந்தார். இந்தப் படத்தின் மூலம் இயக்குநராகவும் அறிமுகமானார் மாதவன்.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
தமிழ், கன்னடம், தெலுங்கு, ஆங்கிலம், இந்தி மொழிகளில் ஜூன் 1ம் தேதி இப்படம் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இதனிடையே, 'ராக்கெட்ரி' படம் விமர்சனரீதியாக வரவேற்பை பெற்றாலும், பெரிதாக வசூல் புரியவில்லை என்ற தகவல் வெளியானது. மேலும் இந்தப்படத்தை எடுப்பதற்காக மாதவன் தனது வீட்டை விற்றதாகவும் தகவல்கள் வெளியாகின.
லோகேஷுக்காக விஜய் எடுக்க போகும் மெஹா ரிஸ்க்: வெளியான மரண மாஸ் தகவல்.!
இந்நிலையில் இதனை மறுத்துள்ள மாதவன், "தயவு செய்து யாரும் என் தியாகத்தை அதிகமாக ஆதரிக்காதீர்கள். நான் எனது வீடு உள்ளிட்ட எதையும் இழக்கவில்லை. உண்மையில் ராக்கெட்ரி படத்தில் பணிபுரிந்தவர்கள் அனைவரும் மிகவும் பெருமையுடன் இந்த ஆண்டு அதிக வருமான வரி செலுத்துவார்கள். கடவுளின் அருளால் இந்தப் படத்தால் அனைவரும் நல்ல லாபம் ஈட்டினோம். நான் இன்னும் என் வீட்டில் தான் வாழ்கிறேன்" என்று விளக்கம் அளித்துள்ளார்.