இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கையை மையப்படுத்தி படம் தயாராகவுள்ளது. இந்த படத்தில் நம்பி நாராயணன் கதாபாத்திரத்தில் நடிப்பது மட்டுமன்றி, ஆனந்த் மகாதேவனோடு இணைந்து இயக்கவும் மாதவன் திட்டமிட்டார்.
2018ம் ஆண்டு அக்டோபர் 31-ம் தேதி இப்படத்திற்கான முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டது. தமிழ், இந்தி, ஆங்கிலத்தில் நேரடியாகவும் மலையாளம் மற்றும் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டும் இப்படம் உருவாகும் என படக்குழு தெரிவித்தது.
இந்நிலையில் ஒருசில காரணங்களால் இயக்குநர் பொறுப்பிலிருந்து ஆனந்த் மகாதேவன் தற்போது விலகியுள்ளார். அதனைத் தொடர்ந்து படத்தின் முழு இயக்குநர் பொறுப்பையும் மாதவனே ஏற்றுக் கொண்டுள்ளார். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் உறுதிப்படுத்தினார்.
இந்நிலையில், நடிகர் மாதவன் ‘ராக்கெட்டரி’ படத்திற்கு லோகேஷனை தேர்வு செய்ய ஜியார்ஜியா சென்றுள்ளார். அங்கியிருந்து வீடியோ பதிவிட்ட அவர், தற்போது ஜியார்ஜியாவில் மைனஸ் 6 டிகிரி தட்பவெட்ப நிலை இருப்பதாகவும், ‘ராக்கெட்டரி’ படத்திற்கான அடுத்தக்கட்ட படப்பிடிப்பு இங்கு தான் நடைபெறவுள்ளதாகவும் மாதவன் கூறியுள்ளார்.
விஜய் மூலன் டாக்கீஸ் உடன் இணைந்து சாஃப்ரான் கணேஷ் எண்டெயிர்மெண்ட் நிறுவனம் ’ராக்கெட்டரி’ படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தில் நடிப்பது மட்டுமின்றி நடிகர் மாதவனே இயக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.
2018ம் ஆண்டு அக்டோபர் 31-ம் தேதி இப்படத்திற்கான முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டது. தமிழ், இந்தி, ஆங்கிலத்தில் நேரடியாகவும் மலையாளம் மற்றும் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டும் இப்படம் உருவாகும் என படக்குழு தெரிவித்தது.
இந்நிலையில் ஒருசில காரணங்களால் இயக்குநர் பொறுப்பிலிருந்து ஆனந்த் மகாதேவன் தற்போது விலகியுள்ளார். அதனைத் தொடர்ந்து படத்தின் முழு இயக்குநர் பொறுப்பையும் மாதவனே ஏற்றுக் கொண்டுள்ளார். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் உறுதிப்படுத்தினார்.
இந்நிலையில், நடிகர் மாதவன் ‘ராக்கெட்டரி’ படத்திற்கு லோகேஷனை தேர்வு செய்ய ஜியார்ஜியா சென்றுள்ளார். அங்கியிருந்து வீடியோ பதிவிட்ட அவர், தற்போது ஜியார்ஜியாவில் மைனஸ் 6 டிகிரி தட்பவெட்ப நிலை இருப்பதாகவும், ‘ராக்கெட்டரி’ படத்திற்கான அடுத்தக்கட்ட படப்பிடிப்பு இங்கு தான் நடைபெறவுள்ளதாகவும் மாதவன் கூறியுள்ளார்.
விஜய் மூலன் டாக்கீஸ் உடன் இணைந்து சாஃப்ரான் கணேஷ் எண்டெயிர்மெண்ட் நிறுவனம் ’ராக்கெட்டரி’ படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தில் நடிப்பது மட்டுமின்றி நடிகர் மாதவனே இயக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.