ஆப்நகரம்

அஜித்தை நினைத்து தான் அந்த காட்சியில் நடித்தார் ஷாலினி: அலைபாயுதே சீக்ரெட்டை கூறிய மாதவன்

அலைபாயுதே லவ் ப்ரொபோசல் காட்சியில் மாதவன் தனது மனைவி சரிதாவை நினைத்துகொண்டு நடித்தாராம். அது போல ஷாலினி அஜித்தை நினைத்துக்கொண்டு தான் நடித்தார்.

Samayam Tamil 15 Apr 2020, 4:57 pm
சாக்லெட் பாயாக இருந்து தற்போது ஒரு நட்சத்திர நடிகராக வளர்ந்திருப்பவர் நடிகர் மாதவன். தற்போது அவர் தமிழில் மாறா என்ற படத்தில் நடித்து வருகிறார். அனுஷ்காவுடன் நிசப்தம் என்ற படத்தில் நடித்து முடித்து உள்ளார் அவர். அந்த படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது.
Samayam Tamil Madhavan and Shalini in Alai Payuthey


இந்நிலையில் நேற்று மாதவனின் முதல் படமான அலை பாயுதே படம் வந்து 20 ஆண்டுகள் நிறைவடைந்ததை ரசிகர்கள் கொண்டாடினர்.

அந்த படத்தில் வரும் லவ் ப்ரோபோசல் காட்சி தற்போதும் பிரபலம். "நான் உன்ன விரும்பல.. உன் மேல ஆசைப்படல.. நீ அழகா இருக்கேனு நினைக்கல... ஆனா இதெல்லாம் நடந்துடுமோனு பயமா இருக்கு" என மாதவன் ஷாலினியிடம் கூறுவார்.

அந்த காட்சியில் நடிக்கும் போது மாதவன் தனது மனைவி சரிதாவையும், ஷாலினி தனது காதலர் அஜித்தையும் தான் நினைத்துக்கொண்டு நடித்தார்களாம். அப்படி நடித்ததால் தான் ரயில் காட்சி சிறப்பாக வந்திருந்தது என கூறியுள்ளார்.

அந்த படத்தில் ஒரு நடிகராக மட்டும் இல்லாமல் மணிரத்னத்துக்கு துணை இயக்குனராக மாறி ஷூட்டிங் ஸ்பாட்டில் அனைத்து வேலைகளையும் மாதவன் செய்வாராம்.

மேலும் அஜித் பற்றி பேசிய மாதவன் அவர் தனக்கு ஆரம்பகட்டத்தில் பல்வேறு உதவிகளை செய்துள்ளார் எனவும், தனக்கும் அஜித் போல கார், விமானங்கள் மீது ஈடுபாடு அதிகம், அதனால் அதுபற்றி அதிகம் பகிர்ந்துகொள்வோம் என தெரிவித்துளளார்.

தனிஒருவன் படத்தில் முதலில் வில்லனாக நடிக்க மாதவனைத்தான் அணுகினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அவர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. அந்த சமயத்தில் அவர் அஜித்துக்கு வில்லனாக நடிக்க ஆசை என பேட்டியில் கூறியிருந்தார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்