ஆப்நகரம்

குழப்பத்தில் இருக்கும் மடோனா!

நடிகை மடோனா தற்போது மனக் குழப்பத்தில் இருக்கிறார்.

TNN 27 Oct 2016, 6:31 pm
மலையாள சினிமாவில் இருந்து தமிழ் சினிமாவுக்கு வந்தவர்கள் லட்சுமி மேனன், ரம்யா நம்பீசன், நித்யா மேனன். இவர்கள் அனைவருமே தனது சொந்தக்குரலில் பாடல்களை பாடும் திறமை உள்ளவர்கள். தங்களை புக் பண்ண வரும் இயக்குனர்கள் படங்களில் நடிக்க அழைக்கிறார்களா அல்லது ஒரு பாடல் மட்டும் பாடச் சொல்ல வந்திருக்கிறார்களா என்று இந்த நடிகைகள் குழப்பத்தில் இருந்து வருகின்றனர். இந்த நிலை தற்போது மடோனா செபஸ்டியனுக்கு வந்துள்ளது.
Samayam Tamil madonna will be in a mess
குழப்பத்தில் இருக்கும் மடோனா!


மடோனா செபாஸ்டின் ‘காதலும் கடந்து போகும்’படத்தில் விஜய் சேதுபதியுடன் நடித்துள்ளார். மீண்டும் இவருடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை கே.வி.ஆனந்த் இயக்கி வருகிறார். சமீபத்தில் இப்படத்தில் இடம்பெறும் பாடல் ஒன்றுக்கு வித்தியாச மான குரல் தேடிக்கொண்டிருந்தார் இயக்குனர் கே.வி. ஆனந்த். மடோனாவின் குரல் பொருத்தமாக இருக்கும் என்பதால் அவரையே பாட வைத்தார்.

இதையறிந்த பல இயக்குனர்கள் தங்கள் படங்களில் மடோனாவை பாட வைக்க முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் ‘பவர் பாண்டி’ படத்திற்கு கால்ஷீட் கேட்டனர் படக்குழுவினர். படத்தில் நடிக்கவா? பாடல் பாடவா? என்று தெரியாமல் முதலில் குழம்பிய மடோனா பின்னர் நடிக்கத்தான் அழைக்கின்றனர் என்று நினைத்து சந்தோஷப்பட்டார். ஹீரோயின் கேரக்டருக்கு மடோனா பொருத்தமாக இருப்பார் என்று தெரிந்து அவரை ஒப்பந்தம் செய்துள்ளார் நடிகர் தனுஷ்.

இந்தப் படத்தில் ராஜ்கிரண், பிரசன்னா, ரோபோ சங்கர், நதியா. சாயா சிங் ஆகியோரும் நடிக்கவுள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்