ஆப்நகரம்

இருட்டுக்கு பயம்: நடிகர் பாவெலின் புது அவதாரம்!

’மெட்ராஸ் படத்தில் நல்ல நடிகராக முத்திரை பதித்த பாவெல் நவகீதன் இயக்கத்தில் வி1 என்ற புதிய படம் உருவாகி வருகிறது.

Samayam Tamil 17 Jul 2019, 12:13 pm
மெட்ராஸ் படத்தில் கார்த்தியின் அறிமுகக் காட்சில் அவரிடம் வம்பிழுக்கும் பாத்திரத்தில் நடித்தவர் தான் பாவெல் நவகீதன். அவர் அந்தப் படத்தில் விஜி என்ற கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தியிருப்பார். ’மெட்ராஸ் படத்தில் நல்ல நடிகராக முத்திரை பதித்த பாவெல், அதைத் தொடர்ந்து ‘குற்றம் கடிதல், ‘மகளிர் மட்டும், ‘பேரன்பு, ‘வடசென்னை, என தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்து வருகிறார்.
Samayam Tamil v


பாவெல் நடிப்பில் மட்டுமல்லாது எழுத்து இயக்கம் எனவும் கலக்கி வருகிறார். இவர் இயக்கிய குறும்படங்கள் பல விருதுகளைப் பெற்றுள்ளது. ‘குற்றம் கடிதல், ‘மகளிர் மட்டும் படங்களின் திரைக்கதையிலும் பணியாற்றியுள்ளார். இயக்குனர் ஆகவேண்டும் என்பது இவரது நெடுநாள் கனவு. நடிகராகதமிழ் சினிமாவில் கால்பதித்து ஜெயித்த பிறகு இப்போது இயக்கத்தை கையில் எடுத்திருக்கிறார். V1 என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.
அவரைக் கேட்டுத்தான் எல்லாம் செய்வேன்: காதலர் பற்றி போட்டுடைத்த அமலாபால்!!

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை இயக்குகிறார் பாவெல் நவகீதன். கிருஷ்ணா சேகர் டி.எஸ் ஒளிப்பதிவு செய்கிறார். ரோனி ரப்ஹெல் இசையமைத்துள்ளார். சி.எஸ்.பிரேம் எடிட்டிங் செய்கிறார். பேரடைம் பிக்சர் ஹவுஸ் மற்றும் கலர்புல் பீட்டா முவ்மண்ட் சார்பில் அரவிந்த் தர்மராஜ், என்.ஏ.ராமு, சரவணன் பொன்ராஜ் ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். பாசிடிவ் ப்ரிண்ட் ஸ்டுடியோஸ் சார்பாக எல்.சிந்தன் வெளியிடுகிறார்.
”என் இனிய தமிழ் மக்களே” பாரதிராஜாவுக்கு டுவிட்டரில் குவியும் பிறந்தநாள் வாழ்த்து!
பாவெல்லின் V1படத்தில் கதாநாயகனாக ராம் அருண் காஸ்ட்ரோ நடித்துள்ளார். கதாநாயகியாக விஷ்ணு பிரியா நடித்துள்ளார். மேலும் லிஜேஷ், மைம் கோபி, காயத்ரி, லிங்கா, மோனிகா, மனிஷா ஜித் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இவ்வுலகத்தில் ஒவ்வொரு மனிதருக்கும் ஏதாவது ஒன்றின் மேல் பயம் இருக்கும். அப்படித்தான் இப்படத்தின் ஹீரோ கதாபாத்திரத்திற்கு இருட்டு என்றால் பயம். நாயகன் ஒரு போலீஸ் அதிகாரி, ஆனாலும் அவருக்கு இருட்டைப் பார்த்தால் பயம்.
சிவகார்த்திகேயனின் அடுத்த படம் ரெடி!
V1 என்ற எண் கொண்ட வீட்டில் கொலை நடக்க, அந்த கொலைப்பற்றி விசாரிக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகிறார் கதாநாயகன். இருட்டைப் பார்த்து பயப்படும் கதாநாயகன் இந்த கொலைக்கான காரணத்தையும், கொலைகாரனையும் கண்டுப்பிடித்தாரா என்பதே இப்படத்தின் முடிவு. இப்படி வித்தியாசமான ஐடியாவில் இப்படம் உருவாகியுள்ளது. படத்தின் டீஸர் வெளியீட்டுக்கான வேலைகள் தற்போது நடந்து வருகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்