சென்னை : நடிகர்கள் சூர்யா, சரத்குமார் உள்ளிட்ட 8 பேர் மீதான வழக்கு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.
கடந்த 2009 ஆண்டு தமிழ் நாளிதழில் நடிகைகள் குறித்த செய்தி வெளியானது. அதில் நடிகைகள் குறித்து மிகவும் கீழ்த்தரமாக விமர்சிக்கப்பட்டிருந்து. இதன் காரணமாக அப்போதையா நடிகர் சங்க தலைவரான சரத்குமார், தலைமையில் கண்டன கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற நடிகர்கள் சூர்யா, சரத்குமார்,சத்யராஜ், விஜயகுமார், சேரன், விவேக், அருண் விஜயகுமார், ஸ்ரீப்ரியா உள்ளிட்டோர் பத்திரிக்கையாளர்களை கடுமையாக விமர்சித்தனர்.
இதையடுத்து பத்திரிக்கையாளர்களை அவதூறாக பேசியதாக, பத்திரிக்கையாளர் மரிய சூசை உதகை நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் 8 பேருக்கு எதிரான வழக்கை உதகை நீதிமன்றம் பிடிவாரண் பிறப்பித்திருந்தது. அதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில், நடிகர்கள் தொடர்ந்த வழக்கில் 8பேருக்கு எதிரான வழக்கை உதகை நீதிமன்றம் விசாரிக்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.
வழக்கு ரத்து:
இந்நிலையில் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இதில் 8 நடிகர்கள் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த 2009 ஆண்டு தமிழ் நாளிதழில் நடிகைகள் குறித்த செய்தி வெளியானது. அதில் நடிகைகள் குறித்து மிகவும் கீழ்த்தரமாக விமர்சிக்கப்பட்டிருந்து. இதன் காரணமாக அப்போதையா நடிகர் சங்க தலைவரான சரத்குமார், தலைமையில் கண்டன கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற நடிகர்கள் சூர்யா, சரத்குமார்,சத்யராஜ், விஜயகுமார், சேரன், விவேக், அருண் விஜயகுமார், ஸ்ரீப்ரியா உள்ளிட்டோர் பத்திரிக்கையாளர்களை கடுமையாக விமர்சித்தனர்.
இதையடுத்து பத்திரிக்கையாளர்களை அவதூறாக பேசியதாக, பத்திரிக்கையாளர் மரிய சூசை உதகை நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் 8 பேருக்கு எதிரான வழக்கை உதகை நீதிமன்றம் பிடிவாரண் பிறப்பித்திருந்தது. அதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில், நடிகர்கள் தொடர்ந்த வழக்கில் 8பேருக்கு எதிரான வழக்கை உதகை நீதிமன்றம் விசாரிக்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.
வழக்கு ரத்து:
இந்நிலையில் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இதில் 8 நடிகர்கள் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.