ஆப்நகரம்

மீண்டும் நடிகர் தனுஷ் மீது வழக்கு: மதுரை நீதிமன்றம் நோட்டீஸ்

நடிகர் தனுஷ் மற்றும் புதூர் காவல் ஆய்வாளருக்கு மதுரை நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Samayam Tamil 29 Jan 2019, 6:28 pm
மதுரை : நடிகர் தனுஷ் மற்றும் புதூர் காவல் ஆய்வாளருக்கு மதுரை நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
Samayam Tamil dhanush1


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த எம்.மலம்பட்டியை சேர்ந்த கதிரேசன் - மீனாட்சி தம்பதியர் நடிகர் தனுஷ் எங்களுடைய மகன் தான் என்றும், வயதாகிவிட்ட எங்களுக்கு அவர் பராமரிப்பு தொகை வழங்க வேண்டும் என்றும் மேலூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கில் உண்மை இல்லை என கூறி வழக்கை தள்ளுபடி செய்தது.

தனுஷுக்கு நோட்டீஸ் :
இந்நிலையில் அந்த வழக்கின் போது தனுஷ் தாக்கல் செய்த கல்வி சான்றிதழ் உட்பட தாக்கல் செய்த ஆவணங்கள் பொய்யானவை என கதிரேசன் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதனால் நடிகர் தனுஷ் மற்றும் புதூர் காவல் ஆய்வாளருக்கு மதுரை மாவட்ட நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்