ஆப்நகரம்

வாய்க்காலை காணோம்..!-நடிகர் மாதவன் மீது புகார்

கொடைக்கானலில் வாய்க்காலை ஆக்கிரமித்ததாக கூறி நடிகர் மாதவன் மீது மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

TNN 20 Jun 2016, 8:43 pm
கொடைக்கானலில் வாய்க்காலை ஆக்கிரமித்ததாக கூறி நடிகர் மாதவன் மீது மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
Samayam Tamil madurai high court bench issued notice against actor madhavan
வாய்க்காலை காணோம்..!-நடிகர் மாதவன் மீது புகார்



பழனியைச் சேர்ந்த கணேசன் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளை தாக்கல் செய்துள்ள புகார் மனுவில் கூறியுள்ளதாவது: நடிகர் மாதவன் கொடைக்கானலில் உள்ள பாலசமுத்திரத்தில் ராஜம்மாள் என்பவருக்கு சொந்தமான 4.88 ஏக்கர் நிலத்தை வாங்கியுள்ளார்.மேலும் அந்த நிலத்தின் வழியாக செல்லக்கூடிய ராஜவாய்க்காலின் ஒரு பகுதியை ஆக்கிரமித்துள்ளார்,.இது குறித்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்த போது, இது குறித்து செயற்பொறியாளர் ஆய்வு நடத்த உத்தரவிட்டார்.


ஆய்வின் முடிவில் ராஜவாய்க்கால் பயன்பாடு இல்லாமல் இருப்பதாக அறிக்கை அளிக்கப்பட்டது.இது குறித்து தொடர்ந்து புகார் அளித்து வந்ததால்,மாதவனின் அடியாட்கள் என்னை கொலை செய்து விடுவதாக போனில் மிரட்டினர்.இதுகுறித்து காவல்துறையினரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.எனவே அந்த ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிடவேண்டும்.இவ்வாறு அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.


வழக்கை விசாரித்த நீதிபதிகள்,திண்டுக்கல் ஆட்சியர்,மின்வாரிய செயற்பொறியாளர்,பழனி வட்டாச்சியர் மற்றும் நடிகர் மாதவன் ஆகியோருக்கு இந்த புகார் குறித்து பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டனர்.வழக்கு ஜூலை 31-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்