நடிகர் விஜய்க்கு எவ்வளவு வெறித்தனமான ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று சொல்லி தெரிய வேண்டியது இல்லை. அவரது படங்களை திருவிழாவைப் போல கொண்டாடும் ரசிகர்கள் இருக்கிறார்கள். நாளை மறுதினம் ஜூன் 22-ம் தேதி விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதைக் கொண்டாட தற்போது ரசிகர்கள் மிகத் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் மதுரையில் விஜய் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர் மிக பரபரப்பாக பேசப்படுகிறது. விஜய் அரசியலுக்கு வர சொல்லும் விதமாக அந்த போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.
‘வாங்கய்யா வாத்தியாரய்யா’ என குறிப்பிட்டு அந்த போஸ்டரில் கூறப்பட்டிருப்பதாவது..
கேரளா போன்ற நேர்மையான அரசாகவும்
ஆந்திரா போன்ற மக்களுக்கான அரசாகவும்
டெல்லியை போன்று ஊழலற்ற அரசாகவும்
தமிழ்நாடு அமைய வாங்கய்யா வாத்தியார் ஐயா
வரவேற்க வந்தோம் ஐயா. ஏழைகள் உங்களை நம்பி எதிர்பார்த்து நின்றோம் ஐயா
என அந்த போஸ்டரில் குறிப்பிட்டுள்ளனர். மதுரை மத்திய தொகுதி தலைமை விஜய் மக்கள் இயக்கம் தான் இந்த போஸ்டரை மதுரை முழுவதும் ஒட்டி உள்ளது.
இதுபோல பல போஸ்டர்களைப் கடந்த சில நாட்களாகவே தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் ஒட்டப்பட்டு வருகின்றன. விஜய்யை வருங்கால தலைவர் எனக் குறிப்பிடும் வகையில் பல போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன. இப்படி விஜய்யை அரசியலுக்கு அழைக்கும் விதமாக ரசிகர்கள் போஸ்டர் ஒட்டுவது முதல் முறையல்ல இதற்கு முன்பு பல வருடங்களாகவே அதை செய்து வருகின்றனர்.
இப்படி ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தினாலும், விஜய் அரசியலுக்கு வருவது பற்றி இதுவரை எந்த விதமான அறிவிப்புகளையும் மறைமுகமாக கூட வெளியிட்டதில்லை. விஜய் தற்போது சினிமாவில் மட்டுமே முழுக்க முழுக்க கவனம் செலுத்தி வருகிறார். அவர் நடித்து முடித்திருக்கும் மாஸ்டர் படம் ஏப்ரல் மாதம் 9ஆம் தேதியே வெளியாகியிருக்க வேண்டும். ஆனால் கொரோனா பிரச்சனை காரணமாக அதன் ரிலீஸ் தாமதம் ஆகியுள்ளது. தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளதால் படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்பது இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள மாஸ்டர் படத்தில் விஜய் கல்லூரி பேராசிரியராக நடிக்கிறார் என கூறப்படுகிறது. அவர் போதைக்கு அடிமையான நபராக நடித்து இருப்பார் என்று படத்தின் போஸ்டரிலேயே குறிப்புகள் இருந்தன. அவருக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் சாந்தனு, ஆண்ட்ரியா, விஜய் சேதுபதி, கைதி அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். விஜய் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோருக்கு இடையேயான மோதல் காட்சிகள் தான் ஹைலைட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. மாஸ்டர் படத்தின் ஷுட்டிங் சென்னை, ஷிமோகா, டெல்லி, நெய்வேலி உள்ளிட்ட பல இடங்களில் நடந்தது குறிப்பிடத்தக்கது.
அடுத்து விஜய் தனது 65வது படத்திற்காக தயாராகி வருகிறார். இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஜய்யின் பிறந்த நாளன்று வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் தான் என கூறப்பட்டாலும் அது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் தற்போது வரை வெளிவரவில்லை. இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கப் போவது யார் என்பது பற்றிய விவரங்களும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. மடோனா செபஸ்டியன் நடிக்கிறார் என கடந்த சில நாட்களுக்கு முன்பு தகவல் பரவிய நிலையில், நேற்று ராஷ்மிகா விஜய்யுடன் ஜோடி சேரும் வாய்ப்பு இருக்கிறது என செய்தி பரவியது. ஹீரோயின் யார் என்பது படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தால் தான் உறுதியாகும்.
இந்நிலையில் மதுரையில் விஜய் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர் மிக பரபரப்பாக பேசப்படுகிறது. விஜய் அரசியலுக்கு வர சொல்லும் விதமாக அந்த போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.
‘வாங்கய்யா வாத்தியாரய்யா’ என குறிப்பிட்டு அந்த போஸ்டரில் கூறப்பட்டிருப்பதாவது..
கேரளா போன்ற நேர்மையான அரசாகவும்
ஆந்திரா போன்ற மக்களுக்கான அரசாகவும்
டெல்லியை போன்று ஊழலற்ற அரசாகவும்
தமிழ்நாடு அமைய வாங்கய்யா வாத்தியார் ஐயா
வரவேற்க வந்தோம் ஐயா. ஏழைகள் உங்களை நம்பி எதிர்பார்த்து நின்றோம் ஐயா
என அந்த போஸ்டரில் குறிப்பிட்டுள்ளனர். மதுரை மத்திய தொகுதி தலைமை விஜய் மக்கள் இயக்கம் தான் இந்த போஸ்டரை மதுரை முழுவதும் ஒட்டி உள்ளது.
இதுபோல பல போஸ்டர்களைப் கடந்த சில நாட்களாகவே தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் ஒட்டப்பட்டு வருகின்றன. விஜய்யை வருங்கால தலைவர் எனக் குறிப்பிடும் வகையில் பல போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன. இப்படி விஜய்யை அரசியலுக்கு அழைக்கும் விதமாக ரசிகர்கள் போஸ்டர் ஒட்டுவது முதல் முறையல்ல இதற்கு முன்பு பல வருடங்களாகவே அதை செய்து வருகின்றனர்.
இப்படி ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தினாலும், விஜய் அரசியலுக்கு வருவது பற்றி இதுவரை எந்த விதமான அறிவிப்புகளையும் மறைமுகமாக கூட வெளியிட்டதில்லை. விஜய் தற்போது சினிமாவில் மட்டுமே முழுக்க முழுக்க கவனம் செலுத்தி வருகிறார். அவர் நடித்து முடித்திருக்கும் மாஸ்டர் படம் ஏப்ரல் மாதம் 9ஆம் தேதியே வெளியாகியிருக்க வேண்டும். ஆனால் கொரோனா பிரச்சனை காரணமாக அதன் ரிலீஸ் தாமதம் ஆகியுள்ளது. தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளதால் படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்பது இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள மாஸ்டர் படத்தில் விஜய் கல்லூரி பேராசிரியராக நடிக்கிறார் என கூறப்படுகிறது. அவர் போதைக்கு அடிமையான நபராக நடித்து இருப்பார் என்று படத்தின் போஸ்டரிலேயே குறிப்புகள் இருந்தன. அவருக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் சாந்தனு, ஆண்ட்ரியா, விஜய் சேதுபதி, கைதி அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். விஜய் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோருக்கு இடையேயான மோதல் காட்சிகள் தான் ஹைலைட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. மாஸ்டர் படத்தின் ஷுட்டிங் சென்னை, ஷிமோகா, டெல்லி, நெய்வேலி உள்ளிட்ட பல இடங்களில் நடந்தது குறிப்பிடத்தக்கது.
அடுத்து விஜய் தனது 65வது படத்திற்காக தயாராகி வருகிறார். இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஜய்யின் பிறந்த நாளன்று வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் தான் என கூறப்பட்டாலும் அது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் தற்போது வரை வெளிவரவில்லை. இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கப் போவது யார் என்பது பற்றிய விவரங்களும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. மடோனா செபஸ்டியன் நடிக்கிறார் என கடந்த சில நாட்களுக்கு முன்பு தகவல் பரவிய நிலையில், நேற்று ராஷ்மிகா விஜய்யுடன் ஜோடி சேரும் வாய்ப்பு இருக்கிறது என செய்தி பரவியது. ஹீரோயின் யார் என்பது படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தால் தான் உறுதியாகும்.