ஆப்நகரம்

சினேகா ஏன் பிரசன்னாவை திருமணம் செய்தார்னு இப்போ புரியுது

மாஃபியா படம் பிடிக்கவில்லை என்று தெரிவித்த சினிமா ரசிகருக்கு பிரசன்னா அளித்த பதில் அனைவரையும் கவர்ந்துவிட்டது.

Samayam Tamil 24 Feb 2020, 1:15 pm
கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண் விஜய், பிரசன்னா, ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடித்த மாஃபியா படம் கடந்த வாரம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. படத்தை பார்த்த அனைவரும் வில்லன் கதாபாத்திரத்தில் பிரசன்னா மிரட்டியுள்ளதாக பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
Samayam Tamil prasanna


தன்னை பாராட்டி ட்வீட் போடுபவர்களுக்கு நன்றி தெரிவித்தும், ரீட்வீட் செய்துமே பிரசன்னாவுக்கு கை வலித்திருக்கும். அந்த அளவுக்கு பாராட்டுக்கள் வந்து குவிகின்றது.

இந்நிலையில் ஒருவர் மட்டும் மாஃபியா படம் நன்றாக இல்லை என்று ட்வீட் செய்தார். அந்த ட்வீட்டுக்கு பிரசன்னா தன்மையாக பதில் அளித்து ரசிகர்களின் மனங்களை வென்றுவிட்டார்.

எந்த படமாக இருந்தாலும் பிடிக்கலாம், பிடிக்காமலும் போகலாம். அதனால் உங்களின் கருத்தை நான் வரவேற்கின்றேன் என்று பிரசன்னா பதில் அளித்துள்ளார். அதை பார்த்த ரசிகர் ஒருவர் கூறியிருப்பதாவது, மாஃபியா அத்தியாயம் 2 படத்திற்காக காத்திருக்கிறோம். இந்த மோசமான கமெண்ட்டுக்காக இல்லை. இதை மனதார கூறுகிறேன். உங்களுக்கு வாழ்த்துக்கள் என்று தெரிவிக்க ஸ்மைலியை பதிலாக அளித்துள்ளார் பிரசன்னா.

Vishal எல்லாமே உண்மை தானாம்: விஷாலே உண்மையை சொல்லிட்டார்

பிரசன்னாவின் பதிலை பார்த்த ரசிகர்கள், அண்ணா இந்த ட்வீட் உங்களின் பெருந்தன்மையை காட்டுகிறது. சினேகா அக்கா ஏன் உங்களை காதலித்து திருமணம் செய்தார் என்பது புரிகிறது. பெரிய மனசுண்ணா உங்களுக்கு என்று தெரிவித்துள்ளார்கள்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்