ஆப்நகரம்

சசிகுமார் படத்தில் நானா? விளக்கம் அளித்த மகாநதி ‘கீர்த்தி சுரேஷ்’!

எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கும் படத்தில் 2வது முறையாக நடிகர் சசிகுமார் இணைவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Samayam Tamil 20 Sep 2018, 12:00 pm
சென்னை: எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கும் படத்தில் 2வது முறையாக நடிகர் சசிகுமார் இணைவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
Samayam Tamil keerthi-suresh


தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் கீர்த்தி சுரேஷ். தற்போது மிகப்பெரிய நடிகர்களின் படங்களை தன் கையில் வைத்துள்ளார்.

பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்று படமாக மகாநதியில் நடித்ததன் மூலம், பெரும் பாராட்டுகளைப் பெற்றுள்ளார். இந்நிலையில் சசிகுமாரின் ‘கொம்பு வச்ச சிங்கம்’ படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாக முன்னர் தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும் இந்தப் படத்தை கீர்த்தி சுரேஷ் ஒப்புக் கொள்ளவில்லை என்று செய்திகள் வெளியாகின. ஆனால் சசிகுமாருடன் நடிக்க சம்மதம் தெரிவித்ததாக தமிழ் திரையுலகில் கூறப்படுகிறது. கிராமப்புற பின்னணியில் கொம்பு வச்ச சிங்கம் கதை உருவாக்கப்பட்டுள்ளது.

இப்படம் மூலம் எஸ்.ஆர்.பிரபாகரன் உடன் 2வது முறையாக சசிகுமார் கைகோர்க்கிறார். தற்போது விஜய் உடன் சர்கார் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் வரும் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது.

மேலும் விக்ரமுடன் சாமி ஸ்கொயர் படத்தில் நடித்து முடித்துவிட்டார். இப்படம் வரும் 27ஆம் தேதி வெளியாகிறது. விஷால் உடன் சண்டக்கோழி படத்தில் நடித்து வருகிறார். இப்படம் வரும் அக்டோபரில் வெளிவருகிறது.

Mahanati star Keerthy Suresh clarifies about playing lead role in Sasikumar’s upcoming film.

அடுத்த செய்தி

டிரெண்டிங்