ஆப்நகரம்

கோடி ரூபாய் வழங்கிய மகேஷ் பாபு

நடிகர் மகேஷ்பாபு தான் பிறந்து வளர்ந்த சொந்த கிராமத்திற்கு ரூ.1 கோடி ரூபாயை தானமாக வழங்கியுள்ளார்.

TOI Contributor 10 May 2016, 3:48 pm
நடிகர் மகேஷ்பாபு தான் பிறந்து வளர்ந்த சொந்த கிராமத்திற்கு ரூ.1 கோடி ரூபாயை தானமாக வழங்கியுள்ளார்.
Samayam Tamil mahesh babu donates rs 1 crore to woman organization
கோடி ரூபாய் வழங்கிய மகேஷ் பாபு


தமிழ்நாட்டில் சினிமா நடிகர்கள் மீது மோகம் கொண்டு திரியும் எண்ணற்ற ரசிகர்களைப் பார்த்திருக்கிறோம். தங்களது சொந்த பணத்தில் தன் அபிமான நடிகர்கள் படம் வெளிவந்தால் பாலாபிஷேகம் செய்வதும், பந்தல் போடுவதும், தோரணம் கட்டுவதும் என செய்யும் ரசிகர்கள் தமிழ்நாட்டில் நிறையவே உண்டு. ஆனால், இந்த ரசிகர்களுக்காக இதுவரை எந்த ஒரு நடிகரும் தங்களது சொந்தப் பணத்தை செலவு செய்ததாக வரலாறே கிடையாது.

அஜித், விஜய்யைப் போன்ற முன்னணி நடிகரான மகேஷ்பாபு அவரது சொந்த ஊரான புர்ரிபள்ளத்தைத் தத்தெடுத்து அதை ‘மாடல் கிராமம்‘ ஆக மாற்ற முயற்சி எடுத்து வருகிறார். அந்த ஊருக்கு சமீபத்தில் 1 கோடி ரூபாயைக் கொடுத்திருக்கிறார். “புர்ரிபள்ளம் வந்தது சொந்த வீட்டுக்கு வந்த மிகவும் மகிழ்ச்சியான தருணம். என் மீது காட்டிய அன்புக்கும், பாசத்துக்கும் மிக்க நன்றி.

இந்த கிராமத்தில் உள்ள அனைவருக்கும், எனது ரசிகர்களுக்கும், தலைவர்களுக்கும், அதிகாரிகளுக்கும், போலீஸ், மீடியா அனைவருக்கும் நன்றி. இந்த நாளை மிகவும் சிறப்பான நாளாக மாற்றியிருக்கிறீர்கள். புர்ரிபள்ளம் கிராமத்தை ஒரு மாடல் கிராமம் ஆக மாற்ற அனைவரது உதவியையும் எதிர்பார்க்கிறேன்” என்றார் மகேஷ்பாபு.

அடுத்த செய்தி

டிரெண்டிங்