ஆப்நகரம்

இந்தி படங்களில் நடித்து நேரத்தை வீணாக்க விரும்பலை: ஒரே போடாக போட்ட மகேஷ் பாபு.!

இந்தி படங்களில் நடிப்பது குறித்து தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு தெரிவித்துள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 10 May 2022, 7:43 pm
இயக்குநர் பரசுராம் இயக்கத்தில் மகேஷ் பாபு, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'சர்க்காரு வரி பாட்டா' படம் நாளை மறுதினம் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. கிட்டத்தட்ட 23 ஆண்டுகளாக திரைத்துறையில் முன்னணி நடிகரகாக திகழும் மகேஷ் பாபு, இந்தி திரைப்பத்துறையிலிருந்து பல வாய்ப்புகள் வந்தும் அதில் நடிக்க மறுத்து வருகிறார்.
Samayam Tamil Mahesh Babu
Mahesh Babu


இந்நிலையில், அவர் தயாரிக்கும் 'மேஜர்' படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சியின் பத்திரிகையாளர் சந்திப்பின்போது அளித்த பேட்டியில், இந்தி படங்களில் நடிப்பீர்களா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த மகேஷ் பாபு, ''நான் திமிருடன் பேசுவதாக நீங்கள் நினைக்கலாம். இந்தியில் எனக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்தன. ஆனால், அவர்களால் என்னை நடிக்க வைக்க முடியாது என நினைக்கிறேன்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இந்தி படங்களில் நடித்து நான் என் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. தெலுங்கு திரையுலகில் எனக்கு இருக்கும் நட்சத்திர அந்தஸ்தும் காதலும், வேறு துறைக்கு செல்ல வேண்டும் என்று என்னை நினைக்க விட்டதில்லை. நான் எப்போதும் தெலுங்கு படங்களில் நடிப்பதையே விரும்புகிறேன். இந்தியா முழுவதும் உள்ளவர்கள், அந்த படங்களை பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். இப்போது அது நடக்கும்போது நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

'விக்ரம்' படத்தின் மரண மாஸ் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு: தரமான சம்பவம் இருக்கு.!
எனது பலம் தெலுங்கு படங்கள் தான், என்னால் தெலுங்கு மொழிப்பட திரைப்பட உணர்வை எளிதில் புரிந்துகொள்ள முடியும் என்ற இந்த வலுவான கருத்து எனக்கு எப்போதும் உண்டு'' என தெரிவித்துள்ளார். அண்மையில் மகேஷ் பாபு நடிப்பில் வெளிவந்த 'மகரிஷி' படம் மெகா ஹிட்டானது. இதனை இயக்கிய வம்சி பைடிபள்ளிதான் தற்போது விஜய்யின் 'தளபதி 66' படத்தை இயக்கி வருகிறார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்