ஆப்நகரம்

பிரபல நடிகைக்கு கொலை மிரட்டல் விடுத்த தயாரிப்பாளர்!

பிரபல நடிகையான ஹன்சிகாவுக்கு, தயாரிப்பாளர் மகேஷ் கோவிந்தராஜ் என்பவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

Samayam Tamil 8 Sep 2018, 6:27 pm
பிரபல நடிகையான ஹன்சிகாவுக்கு, தயாரிப்பாளர் மகேஷ் கோவிந்தராஜ் என்பவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
Samayam Tamil atharva


நடிகை ஹன்சிகா தற்போது ‘100’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் நாயகனாக அதர்வா நடித்து வருகிறார். இந்தப் படத்தை சாம் ஆன்டன் இயக்கி வருகிறார். இந்தப் படத்தை ஆரா சினிமாஸ் சார்பில் மகேஷ் கோவிந்தராஜ் தயாரித்து வருகிறார்.

இந்த படத்தில் அதர்வா, போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்கிறார். தயாரிப்பாளர் மகேஷின் தந்தை திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த பிரபல காட்சியைச் சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது. இப்படத்தில் ஹன்சிகாவுக்கு ரூ. 75 லட்சம் சம்பளம் பேசப்பட்டது. முன் பணமாக ரூ.35 லட்சம் கொடுத்திருக்கிறார் மகேஷ். மீதி பணத்தை படம் முடித்த பிறகு கொடுப்பதாக கூறி இருந்த நிலையில், பாதி படத்தை நடித்து முடித்த பிறகு ஹன்சிகா மீதி சம்பளத்தை கேட்டுள்ளார்.

அப்போது ரூ. 40 லட்சத்திற்கு 5 செக்குகள் கொடுத்துள்ளார் தயாரிப்பாளர் ரமேஷ். மூன்று நாட்கள் ஷூட்டிங் பெண்டிங் இருந்த நிலையில் மகேஷ் கொடுத்த செக் பணமில்லாமல் திரும்பி விட்டது. பணம் கையில் கிடைத்தால்தான் ஷூட்டிங் வருவேன் என ஹன்சிகா கூறியுள்ளார் ஹன்சிகா. அத்துடன் நடிகர் சங்கத்திலும் புகார் கொடுத்துவிட்டார்.

இதனால் கோபமடைந்த தயாரிப்பாளர் மகேஷ், ‘நான் நினைத்தால் தமிழ் சினிமாவிலேயே நீ இருக்க முடியாது. உன் முகத்துல ஆசிட் ஊத்திவிடுவேன் என்றும், உன்னை கொலை செய்யவும் தயங்கமாட்டேன் என்றும் ஹன்சிகாவிடம் போனில் மிரட்டியுள்ளாராம். இந்த சம்பவம் தற்போது கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்