‘குற்றம் 23’ படத்தில் தன்னை அழகாக காண்பித்த கேமராமேன் கே.எம்.பாஸ்கரனை புகழ்ந்து தள்ளுகிறார் நடிகை மகிமா நம்பியார்.
‘சாட்டை’ படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை மகிமா நம்பியார்.மேலும் இவர் தற்போது வெளியாகியுள்ள ‘குற்றம் 23’ படத்திலும் நடித்தார். அடுத்து இயக்குனர் ரவிஅரசு இயக்கும் ‘ஐங்கரன்’ படத்தில் ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்தில் கல்லூரி மாணவியாக மகிமை நம்பியார் நடிக்கிறார்.
இந்தப் படம் குறித்து நடிகை மகிமா நம்பியார் கூறுகையில், ‘‘‘ஐங்கரன்’ படத்தில் நான்கு நாட்கள் ஜி.வி.பிரகாசுடன் இணைந்து நடித்தேன். எந்த மாதிரியான கதாபாத்திரம் என்பது பற்றி என்னிடம் இன்னும் டைரக்டர் சொல்லவில்லை. இப்படி எனக்கு பல படங்கள் கிடைப்பதற்கு முக்கிய காரணம், ‘குற்றம் 23’ படத்தின் கேமராமேன் கே.ஸ்.பாஸ்கரன்தான் என்கிறார் மகிமா நம்பியார் .
காரணம், குற்றம் 23 படத்தில் நடிக்க சென்றபோது என் முகத்தில் மேக்கப்பை போடவே அவர் அனுமதிக்கவில்லை. இதனால் நான் பயந்து விட்டேன். மேக்கப்பே போடாமல் எப்படி நம்மை அழகாக காட்ட முடியும் என்று பயந்தபடியே நடித்தேன். பின்னர் படத்தின் ஆடியோ வெளியானபோது, நான் ரொம்ப அழகாக இருப்பதாக பலரும் சொன்னார்கள்.
இப்போது வரை படம் பார்த்து விட்டு என்னை தொடர்பு கொள்ளும் நண்பர்கள் எனது அழகைப்பற்றிதான் பெருமையாக பேசுகிறார்கள்.அதனால் என்னை மிகவும் அழகாக காண்பித்த கேமராமேன் கே.எம்.பாஸ்கரன் எனது சினிமா கேரியரில் மறக்க முடியாதவராகி விட்டார். அதனால் என்னால் ஒருநாள்கூட அவரிடம் பேசாமல் இருக்க முடியவில்லை. தினமும் போன் செய்து அவரிடம் பேசி வருகிறேன்’’ என்கிறார் மகிமா நம்பியார்.
‘சாட்டை’ படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை மகிமா நம்பியார்.மேலும் இவர் தற்போது வெளியாகியுள்ள ‘குற்றம் 23’ படத்திலும் நடித்தார். அடுத்து இயக்குனர் ரவிஅரசு இயக்கும் ‘ஐங்கரன்’ படத்தில் ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்தில் கல்லூரி மாணவியாக மகிமை நம்பியார் நடிக்கிறார்.
இந்தப் படம் குறித்து நடிகை மகிமா நம்பியார் கூறுகையில், ‘‘‘ஐங்கரன்’ படத்தில் நான்கு நாட்கள் ஜி.வி.பிரகாசுடன் இணைந்து நடித்தேன். எந்த மாதிரியான கதாபாத்திரம் என்பது பற்றி என்னிடம் இன்னும் டைரக்டர் சொல்லவில்லை. இப்படி எனக்கு பல படங்கள் கிடைப்பதற்கு முக்கிய காரணம், ‘குற்றம் 23’ படத்தின் கேமராமேன் கே.ஸ்.பாஸ்கரன்தான் என்கிறார் மகிமா நம்பியார் .
காரணம், குற்றம் 23 படத்தில் நடிக்க சென்றபோது என் முகத்தில் மேக்கப்பை போடவே அவர் அனுமதிக்கவில்லை. இதனால் நான் பயந்து விட்டேன். மேக்கப்பே போடாமல் எப்படி நம்மை அழகாக காட்ட முடியும் என்று பயந்தபடியே நடித்தேன். பின்னர் படத்தின் ஆடியோ வெளியானபோது, நான் ரொம்ப அழகாக இருப்பதாக பலரும் சொன்னார்கள்.
இப்போது வரை படம் பார்த்து விட்டு என்னை தொடர்பு கொள்ளும் நண்பர்கள் எனது அழகைப்பற்றிதான் பெருமையாக பேசுகிறார்கள்.அதனால் என்னை மிகவும் அழகாக காண்பித்த கேமராமேன் கே.எம்.பாஸ்கரன் எனது சினிமா கேரியரில் மறக்க முடியாதவராகி விட்டார். அதனால் என்னால் ஒருநாள்கூட அவரிடம் பேசாமல் இருக்க முடியவில்லை. தினமும் போன் செய்து அவரிடம் பேசி வருகிறேன்’’ என்கிறார் மகிமா நம்பியார்.