ஆப்நகரம்

தமிழகக் கிராமங்கள்தோறும் இப்படியொரு ஏற்பாடா? ஆச்சரியப்பட வைக்கும் பா.ரஞ்சித்!

மக்களை அரசியல் மற்றும் சட்டரீதியாக விழிப்புணர்வு அடையச் செய்வதே நோக்கம் என்று இயக்குநர் பா.இரஞ்சித் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 3 Jun 2019, 4:52 pm
சமூக மாற்றத்தினை குறிக்கோளாகக் கொண்டு, கலைத்துறையில் இயங்கி வருபவர் இயக்குநர் பா.இரஞ்சித். இவர் திரைப்படங்களில் அரசியல், மேடைகளில் உரையாடல் என தேங்கிவிடாமல், களத்திற்குச் சென்று ஒடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் மக்களுக்கு தோள் கொடுத்து தோழனாக நிற்கிறார்.
Samayam Tamil Pa Ranjith


ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அரசியல் விழிப்புணர்வின் அவசியத் தேவையை அடிப்படையாகக் கொண்டு, பா.ரஞ்சித்தின் "நீலம் பண்பாட்டு மையம்" இயக்கத்தின் சார்பில் வேலூர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மூன்று நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.

அங்கு சட்ட ஆலோசனை மையம், இரவு பாட சாலை, நூலகம் ஆகியவற்றை திறந்து வைத்துள்ளார். வேலூர் மாவட்டத்தில் ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி பகுதிகளிலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பென்னக்கல், கௌதாமல், மத்திகிரி, பூதக்கோட்டை, மல்லசந்திரம் ஆகிய கிராமங்களிலும் "டாக்டர் அம்பேத்கர் அரசியல் பள்ளி" என்ற இரவு பாட சாலையினை தொடங்கி வைத்திருக்கிறார்.

இதுகுறித்து பா.ரஞ்சித் கூறுகையில், "இந்த இரவு பாட சாலையின் மூலம், அரசியல் மற்றும் சட்ட விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தி அறிவார்ந்தவர்களாக நெறிப்படுத்துவதே எனது நோக்கம்.

இதைப்போலவே தமிழகம் முழுக்க இருக்கிற கிராமங்களிலும் இதனை செயல்படுத்தும் திட்டமும் இருக்கிறது. இந்த நிகழ்வினை ஒருங்கிணைக்க ஒத்துழைத்த ஜெய்பீம் பேரவை மற்றும் டாக்டர் பீமாராவ் அம்பேத்கர் இளைஞர் மன்றம் ஆகியோருக்கு நன்றிகள்" என்றார்.

திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித்தின் செயல்பாட்டிற்கு அப் பகுதி மக்களிடத்தில் பெரும் வரவேற்பை கிடைத்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்