ஆப்நகரம்

மேக்கப் மேன் என்னிடம் தவறாக நடந்து கொண்டார்: நடிகை பிரயாகா!

படப்பிடிப்பின் போது மேக்கப் மேன் என் கையை முறுக்கி என்னிடம் தவறாக நடந்து கொண்டார் என்று நடிகை பிரயாகா மார்டின் கூறியுள்ளார்.

TNN 22 Mar 2017, 4:38 pm
படப்பிடிப்பின் போது மேக்கப் மேன் என் கையை முறுக்கி என்னிடம் தவறாக நடந்து கொண்டார் என்று நடிகை பிரயாகா மார்டின் கூறியுள்ளார்.
Samayam Tamil makeup man was worng with me actress prayaga martin
மேக்கப் மேன் என்னிடம் தவறாக நடந்து கொண்டார்: நடிகை பிரயாகா!


‘பிசாசு’ படம் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை பிரயாகா மார்டின். கேரளாவை சேர்ந்த அவர் தற்போது மலையாள படங்களில் நடித்து வருகிறார். தற்போது பி.டி. குஞ்சு முகமது இயக்கத்தில் ‘விஸ்வாசபூர்வம் மன்சூர்’ படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அவர் படப்பிடிப்பு தளத்தில் நடந்த சம்பவம் பற்றி கூறுகையில், படத்தில் நான் இஸ்லாமிய பெண்ணாக நடிக்கிறேன். அதனால் மேக்கப் தேவையில்லை என்றார்கள். சம்பவத்தன்று அதிகாலை 4.30 மணிக்கு நான் செட்டுக்கு சென்றேன். முகம் டல்லாக இருக்க வேண்டும் என்று இயக்குனர் தெரிவித்தார். இதையடுத்து மேக்கப் மேனிடம் சென்று டல்லாக மேக்கப் போடுமாறும் அவர் கூறினார். மேக்கப் மேனிடம் சென்றபோது அவர் என்னை கேவலமாக பார்த்ததுடன், அசிங்கமாகவும் பேசினார்.

படப்பிடிப்பு முடிந்த பிறகு நடந்ததை என் அம்மாவிடம் கூறினேன். அவர் வந்து கேட்டதற்கும் மேக்கப் மேன் கண்டபடி திட்டினார். மரியாதையாக பேசுமாறு நான் விரலை நீட்ட அவர் என்னை கையை முறுக்கி அடித்துவிட்டார். என்னிடம் தவறாக நடந்து கொண்ட மேக்கப் மேன் மற்றும் பொய்யான பேஸ்புக் போஸ்ட் போட்ட ஆர்ட் டைரக்டர் ஆகியோர் மீது தனித்தனியாக போலீசில் புகார் அளிக்க உள்ளேன் என்றார் பிரயாகா மார்டின்..

அடுத்த செய்தி

டிரெண்டிங்